“பேரா உங்க பேரு எனக்குத் தெரியாதே”
“ஊர் பேர் தெரியாதவன் கிட்ட எப்படி நீ தைரியமா உன் பேர் சொல்லலாம் என்ன பொண்ணு நீ” என அவன் கோபப்படவும் சட்டென பயந்து எழுந்து நின்றவள் அடுத்த நொடியே கண்கள் சொருக சட்டென அவன் மீதே விழுந்தாள். அவளை பிடித்துக் கொண்டு படுக்கையில் பத்திரமாக படுக்க வைத்தவன் அவளைப் பார்த்தான்
”அடிப்பாவி எதுக்கு இப்ப தூங்கின. நான் பேசிட்டுதானே இருந்தேன். இப்படியா பொறுப்பில்லாம தூங்குவ உன்னை, இரு எழுப்பறேன்” என சொல்லிக் கொண்டே அவளை எழுப்ப முயற்சித்தான். அவளோ எழாமல் தூங்கிக் கொண்டிருக்க அவளை விட்டு எழுந்தவன்
”சரி நான் போறேன் கல்யாணம் முடிஞ்சதும் வந்து உன்னை பார்க்கறேன்” என சொல்லிவிட்டு அவளுக்கு போர்வை போர்த்தியவன் அறைக்கு வெளியே வந்து சம்பங்கியை எழுப்பினான் அவளும் எழுந்து வெற்றியிடம்
”ஐயா சொல்லுங்கய்யா”
“பத்திரமா பார்த்துக்க நான் போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து பார்க்கறேன்”
“சரிங்கய்யா”
“ஏதாவதுன்னா போன் பண்ணாத, என்னால எடுக்க முடியாது அவளை பத்திரமா பார்த்துக்க நீ பாட்டுக்கு அவளை வெளிய விட்டுடாத சரியா”
“சரிங்கய்யா”
என அவள் சொல்லவும் வெற்றியும் வீட்டை விட்டு தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
வெற்றியின் வீட்டுக்குள்ளோ வெற்றியை காணவில்லையென வீடெங்கும் தேடி அலசி விட்டு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.