வீணா...." என்றாள் இந்து நட்புடன்.
"ம்ம்ம்... சஞ்சீவ் சொன்னான்... அவனோட அண்ணியோட க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்ன்னு..."
அவளுடைய 'அவன்'ல் இந்து வீணா இருவரும் தங்களுக்குள் பார்த்து புன்னகைத்து கொண்டனர். அவர்களை கேள்வியாய் பார்த்த போதும், ரஞ்சனியே பேச்சைத் தொடர்ந்தாள்.
"என்னோட ஃபியான்சேக்கு நாளைக்கு பிறந்த நாள்... என்ன மாதிரி டிரஸ் எடுக்குறதுன்னு ஒரே கன்ஃபியுஷன்... அப்போ தான் சஞ்சு... சாரி சஞ்சீவ் ஞாபகம் வந்தது... சஞ்சீவ் என்ன மாதிரி டிரஸ் செலக்ட் பண்றதுன்னு சஜஸ்ட் பண்ண தான் என் கூட வந்தான்..."
"என்ன ரஞ்சனி நீங்க? சஞ்சீவ் உங்க ஃபிரெண்ட்ன்னு சொல்றீங்க அப்புறம் அவரை சஞ்சுன்னு கூப்பிட்டா என்ன?" என்றாள் வீணா ஓரக் கண்ணால் இந்துவை பார்த்தப் படி!
"இல்லை... இல்லை... நான் எப்பவும் அவனை சஞ்சீவ்ன்னு தான் கூப்பிடுவேன்..." என்று அவசரமாக மறுத்தாள் ரஞ்சனி.
"சரி தான், நல்ல டோஸ் போல இருக்கு..." என்றாள் வீணா.
"ரஞ்சனி, நான் தான் உங்க கிட்ட சாரி சொல்லனும் போல இருக்கு... எனக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்லை... நீங்க சஞ்சீவ எப்போதும் போல சஞ்சுன்னே கூப்பிடலாம்..." என்றாள் இந்து.
"அப்பாடி... இப்போ தான் இந்து எனக்கு நிம்மதியா இருக்கு... சஞ்சுக்கு வந்த கோபத்தைப் பார்த்து நானே பயந்துட்டேன்..." என்றாள் ரஞ்சனி முகம் மலர!
அதன் பின் மூன்றுப் பெண்களும் அன்று கடையில் வாங்கிய பொருட்கள் குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசினார்கள். பின்னர் ரஞ்சனி சஞ்சீவ் நட்பு பற்றி பேச்சு வந்தது.
"சஞ்சீவும் நானும் காலேஜ்ல ஒன்னா படிச்சோம்... அப்போ இருந்தே நாங்க ஃபிரெண்ட்ஸ்