“அதைப் பத்தி நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன செய்றேன்னு உனக்குப் புரியுதா?"
இன்ஸ்பெக்டரின் கேள்வியில் தலை கால் ஒன்றும் புரியவில்லை அபினவிற்கு!
"தப்பா ஏதும் செய்துட்டேனா சார்?"
"நீ இப்போ நின்னு விளையாடிட்டு இருந்தீயே அந்த வீட்டைப் பத்தி உனக்கு தெரியுமா?"
கான்ஸ்டபில் வழியாக அஹல்யா பற்றி கேள்விப்பட்ட விபரங்கள் அபினவின் மனதில் வந்துப் போனது!
முதல் முறையாக இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனின் மீது அபினவிற்கு கோபம் வந்தது. கான்ஸ்டபில் பேசினால் பரவாயில்லை. அவரைப் பற்றி அவனுக்கு தெரியும். ஆனால் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் இப்படி பேசினால்?
"எனக்கு ஸ்டேஷனுக்கு ஃபோன் மேல போன் வருது, அபினவ்,” என்றான் தென்றல்வாணன் கோபமாக!
“சார், நான் ட்யூட்டி முடிச்சுட்டு தான் இங்கே வந்தேன்,” விறைப்புடன் பதில் சொன்னான் அபினவ்.
“சோ, நான் இப்போ ட்யூட்டியில இல்லை, இந்த டைம்ல என்னை கேள்வி கேட்காதீங்கன்னு சொல்ற? அப்படி தான?”
“அப்படி இல்லை சார். நீங்க போய் இந்த வீட்டைப் பத்தி தெரியுமா அப்படின்னு எல்லாம் கேட்டா நல்லா இல்லை சார்.”
“உன் நல்லதுக்கு தான் சொல்றேன், அபினவ். நீ லாஸ்ட் இயர் சென்னைக்கு ட்ரெய்னிங் போயிருந்தப்போ நம்ம ஸ்டேஷனுக்கு ஒரு கேஸ் வந்திருந்துச்சு. சேகரன்னு ஒருத்தன்