இறந்ததுப் பத்தின கேஸ். கொலைன்னு வந்து, கன்க்லூஸிவ் எவிடென்ஸ் இல்லாததால ஆக்சிடன்ட்ன்னு க்ளோஸ் ஆச்சு. அதுல மெயின் அக்யூஸ்டா இருந்தது அஹல்யா.”
“சார்?”
“இங்க பக்கத்துல இருக்கவங்களை எல்லாம் பொறுத்த வரைக்கும் நாம சரியா விசாரணையை முடிக்காம கேஸை மூடிட்டோம். அஹல்யா தான் அந்த கொலையை செய்தா!”
“அதெப்படி சார்?”
“உலகம் அப்படி தான் அபினவ்! சரி, அதை விடு! பக்கத்துல இருக்க டீச்சர் ஃபோன் போட்டு சொன்ன உடனேயே சத்யாக்கு மெசேஜ் அனுப்பிட்டு தான் கிளம்பினேன். நீ பைக்ல காரை ஃபாலோ செய்துட்டு வா. வீட்டுக்குப் போகலாம்,” என்றான் தேன்.
அபினவிற்கு தென்றல்வாணன் சொன்ன விபரங்கள் கேட்டு என்னவோ போல இருந்தது. ஆனால் இன்ஸ்பெக்டரிடம் வர முடியாது என்று சொல்ல முடியாமல் வேறு வழி இல்லாமல் அவரின் காரை பின் தொடர்ந்து சென்றான்.
🌼🌸❀✿🌷
தென்றல்வாணன் கதவை ஒருமுறை தட்டிய உடனேயே கதவை திறந்தாள் சத்யா.
“வீட்டுப் பக்கம் வந்து எவ்வளவு நாளாச்சு! எங்களை எல்லாம் மறந்தாச்சா?” என்று அபினவிடம் அவள் கேட்கவும், அபினவ், தென்றல்வாணனை பார்த்துக் கொண்டே,
“மறக்க எல்லாம் இல்லை மேடம். வேலையே சரியா இருக்கு” என்றான்.
அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு கிச்சனுக்கு சென்றாள் சத்யா.
டிவியை ஆன் செய்த தென்றல்வாணன், “நீ உட்காரு அபினவ். டிவி பாரு. நான் ட்ரெஸ்