தென்றல்வாணனின் குரல் ஹாலில் இருந்து ஒலித்தது.
“இங்கே கிச்சனில இருக்காருங்க. நான் தான் ஹெல்ப் செய்யக் கூப்பிட்டேன்,” என்று கணவனுக்கு பதில் அளித்தாள் சத்யா.
தென்றல்வாணனும் கிச்சனுக்கே வந்தான்.
“எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சத்யா. ஸ்டேஷன்ல இருந்து வரவங்க கிட்ட வேலை கொடுக்காதேன்னு???”
“ஹ்ம்ம்!!!! பக்கோடா சாப்பிடுற கஷ்டமான வேலையை வேற யாருகிட்ட நான் கொடுக்குறது?”
அபினவ் பக்கோடா தட்டை தூக்கி காட்ட, தென்றல்வாணன் தன்னுடைய இன்ஸ்பெக்டர் தோரணையை விட்டு விட்டு புன்னகைத்தான்.
“உன்னை மாத்தவே முடியாது சத்யா!”
“இந்தாங்க நீங்களும் சாப்பிடுங்க," என சொல்லி கணவனுக்கு தனியாக பக்கோடாவை தட்டில் வைத்து கொடுத்த சத்யா,
"இரண்டுப் பேரும் மேட்ச் பார்த்துட்டே மொத்த பக்கோடாவையும் காலி செய்ங்க, போங்க! கிச்சன்ல இப்படி கூட்டமா இருந்தா எனக்கு வேலை ஓடாது.” என்றாள்.
மனைவி பேச்சுக்கு பதில் வார்த்தை சொல்லாமல் அவள் கொடுத்த பக்கோடாவை வாங்கி கொண்டு ஹால் பக்கம் நடந்தான் தென்றல்வாணன்.
அபினவும் அவனை தொடர திரும்பவும், “தம்பி எஸ்கேப் ஆயிட்டேன்னு நினைக்காத. நீ வெட்கப்பட்ட விஷயத்தை என் கிட்ட சொல்லாம போக முடியாது. இப்போ போ, போய் உன் இன்ஸ்பெக்டர் சாருக்கு யெஸ் பாஸ் சொல்லு!” என்று சொல்லி அனுப்பி வைத்தாள் சத்யா.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்