அபினவ் ஹால் பக்கம் காட்டிய இடத்தில் இருந்த அவர்களின் கல்யாண போட்டோவை பார்த்து சிரித்தாள் சத்யா.
“இவரை எப்படிக்கா நீங்க லவ் செய்து கல்யாணம் செய்துக் கிட்டீங்க? அவர் வாழ்க்கைல சிரிச்சது அன்னைக்கு ஒரு நாள் தான்னு நினைக்கிறேன்.”
“அப்படில்லாம் இல்லை. அவர் பலாப்பழம் போல அபி. மேலோட்டமா பார்த்தா இனிப்பு தெரியாது, முள்ளு தான் தெரியும்.”
“எந்த ஒய்ஃப் தான் அவங்க ஹஸ்பன்ட்டை விட்டுக் கொடுத்திருக்காங்க!”
“இந்தா உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் பக்கோடா. நீ வரேன்னு அவர் சொன்னதுக்காக தான் செய்தேன்.”
சத்யா நீட்டிய தட்டை கையில் வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ்க்கா!” என்றான் அபினவ்.
“ஆமாம், என்ன அதிசயமா வீக் டேல, இன்ஸ்பெக்டர் சாரே சப்-இன்ஸ்பெக்டர் சாரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கார். என்ன விஷயம்?” என்று விசாரித்தாள் சத்யா.
“பெருசா ஒன்னுமில்லக்கா,” என்றான் அபினவ்!
“அப்போ சின்னதா என்னவோ இருக்கு! அது என்னன்னு சொல்லு!”
அஹல்யாவின் ஞாபகம் வந்து போகவும், அபினவின் முகம் சிவந்தது.
“என்ன பொண்ணு மாதிரி வெட்கப் படுற? என்னப்பா என்ன விஷயம்??? கல்யாண சாப்பாடு போடப் போறீயா?”
“அபினவ்!”