"சரி சரி... இந்து முறைக்கிறா... நாங்க கிளம்புறோம்... பை சஞ்சீவ்..." என்று சொல்லி தன் பக்க கார் கதவை மூடினாள் வீணா.
இந்துவும் புன்னகையுடன் கிளம்புவதாக சஞ்சீவ் பார்த்து தலை அசைத்து விட்டு காரில் ஏறப் போனாள்...
"ஒரு நிமிஷம் இந்து..." என்ற சஞ்சீவின் குரல் அவளை தடுத்தது.
என்ன என்பது போல் அவள் நின்று பார்க்கவும்...
"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்... நாளைக்கு ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாமா?"
சஞ்சீவ் கேட்டக் கேள்வியில் இந்து திகைத்து தான் போனாள்! இவனுக்கு அவளைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? இரண்டு நாளுக்கு முன்பானால் சேலை அழகாயிருக்கும் என்றான்... இன்று... இப்படி ஒரு கேள்வி... இந்துவினுள் கோபம் உருவானது... இருந்தாலும் அதை காட்டி கொள்ளாது,
"நாளைக்கு நாங்க ஃபிரென்ட்ஸ் மூணு பேரும் மீட் பண்றதா பிளான் வச்சிருக்கோம் சஞ்சீவ்... இன்னொரு நாள் பார்க்கலாமே..." என்றாள் அமர்த்தலாக!
சஞ்சீவ் பதில் சொல்லும் முன்,
"ஆமாம் சஞ்சீவ், நாளைக்கு இந்து பிஸி... ஆனால் சனிக்கிழமை ஃப்ரீ தான்... அன்னைக்கு வேணும்னால் பீச்சுக்கு போங்களேன்..." என்றாள் வீணா.
இந்துவிற்கு வீணா மீது கோபமாக வந்தது!!! வீணாவை பிறகு கவனித்துக் கொள்வது என மனதில் முடிவு செய்து விட்டு.
"இல்லை சஞ்சீவ்.... அம்மாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்... நீங்க வேணா அன்னைக்கு மாதிரி வீட்டுக்கு வாங்களேன்..." என்றாள்.