இருக்கவில்லை.
அதை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக நந்தினியின் விழிகளில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது... ஆனாலும் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று எண்ணியவளைப் போல்,
"என்ன எம்டி மேடம், இந்த நேரத்தில இங்கே??? ஆஃபீஸ் வேலையெல்லாம் ரொம்ப மும்முரமா நடக்குதுப் போல இருக்கு.... நீங்க ரொம்ப பிஸின்னு கேள்வி பட்டேன்... இப்போ தானே தெரியுது...." என்று சஞ்சீவ் சென்ற திசையை குறிப்பாய் கண்களில் காட்டிய படி கேட்டாள் நந்தினி.
அந்தக் குரலில் இருந்த கேலியோ, ஏளனமோ கோபத்தை தூண்டியப் போதும், அதை இப்போதும் வெளிக் காட்டாது,
"இப்போ உங்களுக்கு என்ன வேணும்? நான் எங்கே போனாலும் ஆஃபீஸ்ல சொல்லிட்டு போகனும்ன்னு அவசியம் இல்லை... மத்தப்படி நான் லேட்டா வருவேன்னு ஆஃபீஸ்ல தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும்...." என்றாள் இந்து.
"ஹ்ம்ம்ம்... அது சரி! உங்களோட இந்த ரகசிய மீட்டிங் பத்தி உங்க அம்மாவுக்கு தெரியுமா???" என்று விடாது கேட்டாள் நந்தினி. இப்போதும் அதே கேலி + ஏளனம் கலந்த தோரணையில் தான் கேட்டாள்!
இந்துவால் தன் அருகே ஏற்பட்ட வேகமான அசைவை உணர முடிந்தது... அதற்கு காரணம் வீணாவின் கோபம் என்பதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
வீணா கோபத்தில் ஏதாவது சொல்லி விடக் கூடாதே என வீணாவின் இடக் கரத்தை அழுந்த பற்றிய இந்து,
"அதனால என்ன நந்தினி மேடம்... நீங்க தான் இப்போ என்னோட ரகசியத்தை நேரா பார்த்துட்டீங்களே... விஷயம் ஆட்டோமேட்டிக்கா எல்லோருக்கும் ஸ்ப்ரெட் ஆயிடும் தானே..." என்றாள் நந்தினி பேசிய அதே தோரணையில்!