(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"இல்லை இந்து... நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்... உங்க வீட்டில அப்படி பேசுறது ரொம்ப கஷ்டம்..."

  

சஞ்சீவ் சொன்ன விதத்தினாலோ என்னவோ, இந்து உடனடியாக பதில் சொல்லாமல் நின்றாள்...

"நீங்க கவலைப் படாதீங்க சஞ்சீவ்! ஆன்ட்டி கிட்ட நான் சொல்றேன்... சனிக் கிழமை ஈவ்னிங் உங்க ரெண்டு பேர் அப்பாயின்ட்மென்ட் கன்ஃபர்ம்ட்..." என இந்துவிற்காக தானே முடிவெடுத்து சொன்னாள் வீணா.

  

சஞ்சீவின் முகம் சட்டென்று மலர்ந்தது! இந்துவை பார்த்தான்... அவள் சம்மதமும் சொல்லவில்லை, வீணா சொன்னதை மறுத்தும் சொல்லவில்லை...

  

அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது!

    

"ரொம்ப தேங்க்ஸ்ங்க வீணா... சரி, அப்போ நான் கிளம்புறேன்... பை இந்து... உங்களுக்கு எத்தனை மணிக்கு மீட் பண்றதுன்னு மெசேஜ் அனுப்புறேன்... பை வீணா..." என இருவரிடமும் மாறி மாறி பேசி விட்டு சென்றான் சஞ்சீவ்!

  

காரில் கோபத்துடன் ஏறி, தன்னைப் பார்த்து முறைத்த இந்துவை பார்த்து புன்னகைத்தாள் வீணா..

  

"ன்ன வீணா இது..." என்று கோபத்துடன் இந்து ஏதோ சொல்ல தொடங்கியப் போது, காரின் ஜன்னல் தட்டப் படும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

   

அங்கே நந்தினி பெரிய புன்னகை மின்ன நின்றிருந்தாள்!!!

   

நந்தினியை அங்கே பார்த்ததில் இந்து சிறிது திகைத்து தான் போனாள். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்துக் கொண்டே, கார் கதவை திறந்து என்ன என்பதைப் போல நந்தினியைப் பார்த்தாள். நந்தினியிடம் பேச அவளுக்கு விருப்பம்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.