நந்தினி அதற்கு பதில் சொல்லும் முன், இந்துவே தொடர்ந்து,
"எனக்கு நிறைய வேலை இருக்குங்க மேடம்... நான் கிளம்புறேன்...." என சொல்லிவிட்டு, நந்தினியின் பதிலுக்கு காத்திருக்காமல் கார் கதவை அறைந்து மூடினாள்.
அதற்காகவே காத்திருந்தது போல் வீணாவும் உடனே காரை கிளப்பினாள்.
"செய்றதை எல்லாம் செஞ்சுட்டு பேசுறதைப் பாரு... நடக்க இருந்த கல்யாணத்தை லாஸ்ட் மினிட்ல நிறுத்திட்டு... ப்ச்... என்ன இவ..." என வீணா புலம்புவது இந்துவிற்கும் கேட்டது...
ஆனால் அதைப் பற்றி பேச இந்துவிற்கு விருப்பம் இருக்கவில்லை! எனவே வாயை அழுந்த மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள்!
🌼🌸❀✿🌷
அன்று, அதன் பின் மற்ற விஷயங்களை நினைக்கவும் இந்துவிற்கு நேரம் இருக்கவில்லை...
அலுவலக வேலைகளின் டென்ஷனில் மற்றவற்றை மறந்துப் போனாள்.
போர்டு மீட்டிங்கிற்கு நந்தினி வருவாள் என்பதை அறிந்திருந்ததால், சற்று அதிக சிரத்தையுடனே தேவையான குறிப்புகளை நிலாவின் உதவியுடன் எடுத்து வைத்தாள்.
அன்று மட்டும் அல்லாது மறுநாள் காலையில் சஞ்சீவின் வழக்கமான மெசெஜிற்கு பதில் அனுப்பக் கூட இந்துவிற்கு நேரம் இருக்கவில்லை. போர்ட் மீட்டிங் தொடங்கும் முன், புதிதாக கிடைத்திருந்த டீல் குறித்து அவள் மனதில் எழுந்திருந்த சில சந்தேகங்களை கம்பெனியின் சட்டப் பிரிவில் கேட்டு தீர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது.
நிலாவும் அவளுக்கு உதவ காலையில் சீக்கிரமாகவே வந்து விடுவதாக சொல்லி இருந்தாள். எனவே அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் வந்தடைந்தாள் இந்து. அலுவலக நேரத்திற்கு