This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“நிறைய சினிமா பார்ப்பீங்களா சத்யா?” என்றுக் கேட்டப் போது சக்தியின் பேச்சிலும் அந்த சிரிப்பு கலந்து தான் இருந்தது.
“ஹுஹும் அதெல்லாம் பார்க்குற பழக்கமில்லை. ஆனால், நீங்களும் அவரும் ஓவரா ரியாக்ட் செய்த மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்,” என்றாள் சத்யா!
“ப்ச்,” என அலுத்துக் கொண்டாள் சக்தி.
“சரி உங்க டிபார்ட்மென்ட் எப்படியாவது போகட்டும். அதை விடுங்க சக்தி!” என அவசரமாக சொன்னாள் சத்யா.
“என்னை கேட்டது இருக்கட்டும் நீங்க சொல்லுங்க சத்யா. சீரியல் பார்க்க மாட்டீங்க, சினிமா பார்க்க மாட்டீங்க, வேற என்ன செய்வீங்க?”
“நிறைய புக்ஸ் படிப்பேன். அதும் மிஸ்டரின்னா எனக்கு உயிரு! ஷெர்லக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி, மேரி ஹிகின்ஸ் கிளார்க், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தமிழ்வாணன்... இப்படி எந்த மிஸ்ட்ரி கதையா இருந்தாலும் படிப்பேன்.”
“தென்றல்வாணன் சரியா தேடி கண்டுப்பிடிச்சு தான் உங்களை கல்யாணம் செய்திருக்கார்! அவர் இவ்வளவு சக்சஸ்ஃபுல் போலீஸா இருக்குறதுக்கு பின்னாடி இருக்க சீக்ரட் இப்போ தான் தெரியுது!”
சக்தியின் குரலில் இருந்த பரிகாசம் புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் பதில் சொன்னாள் சத்யா.
“கரக்ட்டா தான் சொன்னீங்க சக்தி! ஆனால், தயவு செஞ்சு அவர் கிட்டப் போய் இதை சொல்லிடாதீங்க! அவரு முகம் போற விதத்தைப் பார்த்து உங்களுக்கு பத்து நாளுக்கு தூக்கம் வராது.”
சிரிக்காமல் இருக்க முயன்றும், முடியாமல், சிரித்தாள் சக்தி!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.