“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ், எங்கம்மா மேத்ஸ் டேலன்ட் எக்ஸாம் பத்தி உங்க கிட்ட பேசனுமாம்,” என ஷாலினி சொல்ல,
“ஓ, ஷுயர். சொல்லுங்க?” ஒரு மெல்லிய முறுவலுடன் சத்யாவைப் பார்த்தாள் அஹல்யா.
“இவ இந்த எக்ஸாம் அட்டென்ட் செய்றேன்னு சொல்றா. அதனால ஏதாவது யூஸ் இருக்காங்க?”
சத்யாவின் உதடுகள் கேள்வி கேட்டது ஆனால், கண்கள் அஹல்யாவை ரகசியமாக எடைப் போட்டது.
மிகவும் பொறுமையாக சத்யாவிற்கு விளக்கம் கொடுத்தாள் அஹல்யா. நடு நடுவே ஷாலினியிடமும் பேசினாள்.
கண்களை நேராகப் பார்த்து பேசிய அஹல்யாவின் கண்களில் தவறு எதையும் சத்யாவால் பார்க்க முடியவில்லை. ஷாலினியிடம் பேசியப் போது அந்த குரலில் இருந்த பரிவை சத்யாவால் கூட உணர முடிந்தது.
ஷாலினியுடன் ஸ்கூலை விட்டு வெளியே வந்தப் போது அபினவைப் போலவே அஹல்யாவை சுற்றி இருக்கும் மர்மத்தை பற்றி முழுதாக தெரிந்துக் கொள்வது என்ற முடிவிற்கு வந்திருந்தாள் சத்யா.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்