சஞ்சீவ் அன்று அவளுக்காக கார் எடுத்து வந்திருந்தான். இந்துவிற்காக அவன் காரின் முன் கதவை திறந்து விடவும், எந்த பந்தாவும் செய்யாமல் முன் இருக்கையில் அமர்ந்தாள் இந்து.
காரை கிளப்பியவன் அமைதியாகவே காரை சாலையில் செலுத்த தொடங்கினான்... அப்படியே சில நிமிடங்கள் செல்ல, இந்து பக்கம் திரும்பி பார்த்தான் சஞ்சீவ். இந்துவும் என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்...
"கனகா உங்க வீட்டில வேலை செய்றவங்க தானே... அவங்க கிட்ட கூட சொல்லிட்டு தான் கிளம்புவீங்களா நீங்க?"
"கனகா ரொம்ப நாளா எங்க வீட்டில இருக்காங்க... ஸ்டில், சொல்லிட்டு கிளம்பனும்ன்னு எந்த ரூலும் இல்லை தான்.... ஆனால், சின்ன வயசில இருந்து அம்மா அப்பா வீட்டில இல்லன்னா, கனகா கிட்ட சொல்லிட்டு கிளம்புறது எனக்கு பழக்கம் ஆயிடுச்சு... இப்போவும் அப்படியே தான்..." என்றாள் இந்து!
"ம்ம்ம்ம்... உங்க குடும்பமே ரொம்ப வித்தியாசமான குடும்பம் தான்..." என்றான் சஞ்சீவ்.
அவனுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்த இந்து கார் அடையாறு பக்கம் செல்வதை உணர்ந்து,
"இப்போ நாம எங்கே போறோம்?" என்றாள்.
கண்களில் ஒரு 'பளிச்சுடன்' அவள் பக்கம் மீண்டும் திரும்பி பார்த்த சஞ்சீவ்,
"ஏன் பயமா இருக்கா?" என்றான்.
"பயமா?? அப்படின்னா என்ன...??" என அவனிடமே கேட்டாள் இந்து.
"ஹ்ம்ம்.... நக்கல்ஸ்?????" என சஞ்சீவ் கேட்கவும்,