”கட்டுங்கறேன்”
”முடியாதுங்கறேன்” என இருவரும் தர்க்கம் புரிய குறுக்கே வந்தார் சண்முகம்
“இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என சொல்ல ஒரே நேரத்தில் அவரை காவேரியும் கொம்பனும் கோபமாக பார்த்தார்கள்
”அப்பா இந்த விசயத்தில நீங்க தலையிடாதீங்க, நான் இவனுக்கு தண்டனை கொடுக்கிறேன்”
”இதுவா தண்டனை இல்லைம்மா அவன் உன் கழுத்தில தாலியை கட்டினா அது உனக்கும“தான் தண்டனை”
”இல்லைப்பா இல்லை நடந்த பிரச்சனைக்கும் இனி வரபோற பிரச்சனைக்கும் ஒரே தீர்வு இதுதான்”
”இல்லைம்மா வேணாம்மா நீ எதை நினைச்சி இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு எனக்குப் புரியுது, என்னை நினைச்சிதானே சரிம்மா நான் அவனை வெட்டமாட்டேன், உன்னை அநாதையாக்க மாட்டேன், உன்கூடவே இருப்பேன் நமக்கு இந்த ஊரே வேணாம், இருக்கறதெல்லாம் வித்துட்டு வேற ஊர்ல போய் வாழ்ந்துக்கலாம் வாம்மா”
”தப்பே செய்யாத நாம ஏன் ஊரை விட்டு ஓடனும், நான் வரமாட்டேன்பா, இது நான் பிறந்த ஊரு, இந்த ஊர்லதான் நான் தலைநிமிர்ந்து வாழனும்”
”இந்த கொம்பனை நீ தப்பா புரிஞ்சி வைச்சிக்கற, அவன் ஊர்க்காரங்களுக்கு நல்லது செய்றதை வைச்சி அவனை நல்லவன்னு நினைச்சிடாதம்மா, அவன் கெட்டவன் அவனை நீ நம்பாத”
”தெரியும்பா நான் ஒண்ணும் அவரை நம்பலை”