(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

எடுபடவில்லை. காவேரியோ கொம்பனை பார்த்து இளப்பமாகச் சிரித்தாள்

  

”என்ன முறைப்பொண்ணே நக்கலா சிரிக்கற போல”

  

”நரகத்தை காட்டறேன்னு சொன்னேன்ல பார்த்தியா நரகம் எப்படியிருக்கு”

  

”எரிச்சலா இருக்கு”

  

”எனக்கு ஏசி போட்ட மாதிரி குளுகுளுன்னு இருக்கு, என் அம்மா உன்கிட்ட எத்தனை முறை கெஞ்சியிருப்பாங்க, கடைசி வரைக்கும் அவங்க ஆசையை நீ நிறைவேத்தலை நிராகரிச்ச உனக்கு சரியான தண்டனை இதுதான் அனுபவி”

  

”அனுபவிச்சி தொலைக்கிறேன் இப்படி ஒரு முறைபொண்ணு எனக்கு தேவைதானா”

  

”இனிமேலயாவது இந்த ஊர்க்காரங்க திருந்தட்டும்”

  

”நாலு பேருக்கு நல்லது செய்தது என் தப்பா ஈசனே, இது என்ன சோதனை” என புலம்ப அவளோ கலகலவென சிரித்தாள், அவளின் சிரிப்பை ஒரு நொடி ரசித்தாலும் மறுநொடி வெறுத்தான். முறையாக சண்முகம் வீட்டில் அக்கம் பக்கமிருந்த பெண்மணிகள் ஆரத்தி எடுக்க சண்முகம் கொம்பனை தனது வீட்டோட மாப்பிள்ளையாக ஆக்கி அவனது கரம் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். நரக வாயிலுக்குள் செல்வது போல கொம்பனும் தன் நிலைமையை நொந்தபடி இன்னும் தனக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கப் போகிறதோ என்ற கலக்கத்துடன் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே சென்றான். காவேரிக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வாக இருந்தது, தனக்கு நடந்த அநீதிக்காக கொம்பனுக்கு தண்டனையை தருவதாக எண்ணி தாலியை கட்டிக் கொண்டாள் ஆனால் கொம்பன் இடத்தில் இருந்து பார்த்த அவளுக்கு கொம்பனுக்கு பெரிய அநீதியை தான் இழைத்துவிட்டோமோ என நினைத்து குற்ற உணர்வுடன் வீட்டிற்குள் கலக்கத்துடன் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.

  

தொடரும்...

Go to Indru nee naalai naan story main page

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.