”அப்பா”
”போடா போய் அவளுக்கு என்ன தேவை ஏது தேவைன்னு கேட்டு செய் பாவம், களைச்சி போயிருப்பா உங்கம்மாகிட்ட சொல்லி ஜுஸ் போட்டு கொண்டு போய் அவள்கிட்ட கொடு போ போ” என விரட்ட அவனோ மனதுள்
”அய்யோ இங்க என்னதான் நடக்குது எல்லாத்துக்கும் அவள்தான் காரணம் அவளை” என நினைத்து வீரமாக அவளை தேடி ஒவ்வொரு அறையாக சென்று பார்த்து கடைசியில் அவளது அறைக்குள் நுழைந்து பார்த்தான்.
நைட்டியில் தேவகன்னிகை போல படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். கோபமாக உள் சென்றவன் சாந்தமாகிப் போனான். அவன் கட்டிய தாலியை நைட்டியின் மீது தெரியும்படி வைத்திருந்தாள். அதைக் கண்டவன் அவளை ஏற இறங்கப் பார்த்து பரவசமானான் ஒரு நொடி அவனது உடலே சிலிர்த்துப் போனது, சிங்கம் போல கர்ஜனையுடன் சென்றவன் பூனை போல அமைதியாகி வெளியே வந்தான், கணக்குபிள்ளையோ அவனைப் பார்த்து சிரிக்க அவன் நொந்தேப் போனான்.
”கொம்பா ம்ம்”
”என்னடா”
”அசத்தற போல”
”இங்க நானே ஆடிப்போயிருக்கேன் நீ ஒண்ணு”
”பார்த்தா அப்படி தெரியலையே சிறுத்தை போல சீறிக்கிட்டு உள்ள போன, வெளிய வர்றப்ப பூனை மாதிரி பவ்யமா வர்ற என்ன விசயம் ஏதாவது கிடைச்சதா”
”ஓ திவ்ய தரிசனம் கிடைச்சது”