(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

ஒரு ரூம்ல படுத்து தூங்கு யார் உன்னை கேள்வி கேட்பா, அப்படியே கேட்டாலும் உன் முறைப்பொண்ணுதான் கேட்பா, என் அனுமதியில்லாம நீ எப்படி தூங்கலாம்னு கேட்டா என்ன செய்வ”

  

”இதெல்லாம் ஓவர் என் பொறுமைக்கும் எல்லையிருக்கு, அதை சீண்டிப்பார்த்தா அவளை ஒரு கை பார்த்துடுவேன்” என வீரமாக பேச கணக்குப் பிள்ளையோ

  

”அய்யோ அய்யோ என்ன சொல்லி உனக்குப் புரிய வைக்கறது, கொம்பா இது உன் வீடு இல்லை இங்க நீ டம்மி பீஸு, இங்கிருக்கறவங்களோட நீ அனுசரிச்சிப் போனாதான் உன்னால இங்க வாழ முடியும்”

  

”என்னடா எல்லாரும் எனக்கே எல்லாத்தையும் சொல்றீங்க, அவளுக்கு சொல்ல வேண்டியதை எனக்கு சொன்னா எப்படி”

  

”உன் முறைபொண்ணு தெளிவா இருக்கா, அவளுக்கு எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை ஆனா, நீ ரொம்ப குழம்பிப் போயிருக்க, உனக்குதான் தெளிவு வேணும், உனக்குதான் அறிவுரை சொல்லனும், அப்பதானே அவள்கூட நீ பக்குவமா குடும்பம் நடத்துவ”

  

”அவள்கூட நான் குடும்பம் நடத்தனுமா ஒருகாலும் முடியாது, நான் யாரு சிவபக்தன், சிவனுக்கு தொண்டாற்றனும்ங்கறது என்னோட லட்சியம், இதுல எந்த மாற்றமும் இல்லை, நிச்சயம் ஒரு நாள் நான் சந்நியாசியாகி காசிக்குப் போகதான் போறேன் நீ வேணா பாரு”

  

”சரி போறதுதான் போற கையோட உன் முறைபொண்ணையும் கூட்டிட்டுப் போ”

  

”சே சே அந்த ராட்சஸியை யார் கூட்டிட்டு போறது, அவள் இங்கயே இருக்கட்டும், அவள் வந்தா என் நிம்மதி பறிபோகும், நான் மட்டும் காசிக்கு போவேன்” என சொல்ல அதைக்கேட்டபடி ஓரமாக நின்றிருந்த காவேரியோ ம்க்கும் என தொண்டையை செருமினாள் அதன் சத்தம் கேட்டு கணக்குப் பிள்ளை அவசரமாக அவள் பக்கம் சென்று நின்றுவிட அதை கூட கவனியாமல் கொம்பனோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.