(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

“அப்படியா”

  

”அடிவாங்காதடா எனக்கு வெறுப்பே வருது”

  

”ஏன்”

  

”எங்க குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம், என் அப்பாவை பார்த்து இந்த ஊரே மரியாதை தரும் ஆனா, அவர் என்னடான்னா ஊர்க்காரங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திண்டாடறாரு, எங்கம்மா என் வீட்டுக்கே மகாராணி அவங்க என்னடான்னா இங்க வந்து சமையல்கட்டுல சமைச்சிக்கிட்டு இருக்காங்க, என் சொந்த பந்தம் எல்லாம் ஆளுக்கொரு வேலைகளை செய்றாங்க, இதுல நான் போய் அவளுக்கு ஜுஸ் போட்டு கொண்டு போய் கொடுக்கனுமாம் கொடுமையா இருக்கு”

  

”கொம்பா இந்த இடத்திலதான் நீ தப்பா புரிஞ்சிக்கற, எங்க நீ சந்நியாசியாகி போயிடக்கூடாதுன்னு உங்க அப்பா அம்மா எவ்ளோ பயந்தாங்க, வருத்தப்பட்டாங்க, எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சோ அப்பவே அவங்களோட பயம் கவலை எல்லாம் பறந்துடுச்சி, அதுக்கு காரணம் யாரு உன் முறைப்பொண்ணுதானே, அதனால அவளை நல்லபடியா பார்த்துக்கனும்னு ஆசைப்படறாங்க”

  

”அதுக்காக அவளுக்கு நான் என்ன வேலைக்காரனா”

  

”நீ யாரு இந்த வீட்டோட மாப்பிள்ளை, அப்ப இந்த வீட்டு பொண்ணுக்கு செய்ய வேண்டியதை நீதானே செய்யனும்”

  

”இது அவளோட வீடுதான் ஒத்துக்கறேன், பாரு அவள்பாட்டுக்கு வந்தா களைப்பா இருக்குன்னு ரூமுல போய் அசந்து தூங்கறா, என் நிலைமையை பத்தி அவள் ஒரு நொடி நினைச்சிப் பார்த்திருப்பாளா”

  

”இதான் உன் கவலையா கொம்பா வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டாலே இந்த வீட்ல எல்லா உரிமையும் உனக்கு இருக்கு, இப்ப என்ன உனக்கு களைப்பா இருக்கா போய் நீயும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.