“அஹல்யா, நான் லவ் செய்றது உன் மனசை! உன் எதிர் வீட்டுக்காரங்க ஆரம்பிச்சு, என்னோட வேலை செய்றவங்க வரைக்கும் என்ன எல்லாமோ என் கிட்ட சொல்லி இருக்காங்க. அதெல்லாம் உனக்கே கூட தெரிஞ்சிருக்கலாம். நான் அது எதையுமே மதிக்கலை!” என்றான் அபினவ்
“நீங்க செய்றது தப்பு! உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்குறது சுலபம். கொஞ்ச நாள் கழிச்சு தப்பு பண்ணிட்டோம்னு மனசு உறுத்த ஆரம்பிச்சிடும்.”
“இதை எல்லாம் நாளைக்குப் பேசலாம் அஹல்யா. அருண் கிளாஸ் முடிஞ்சிருக்கும். நீ இப்போ கிளம்பு.”
அவளை கிளம்ப வைப்பதிலேயே குறியாக இருக்கிறானே!!!
அவள் யோசிக்கும் விதத்திலேயே அஹல்யாவுக்கு ஒன்றுப் புரிந்தது. அவளுக்கு தான் அபினவிடம் விடைப் பெற்று கிளம்பிச் செல்ல மனம் வரவில்லை!
மனதுக்குள் எதுவோ ஒன்று பிசைந்தது!
“நாளைக்கு வீட்டுல பேச வேண்டாம். பார்க்குக்கு வர முடியுமா? நாம பேச ஈசியா இருக்கும்.” அபினவின் கண்களை நேராக பார்க்க முடியாமல் ஸ்கூட்டியின் ஹான்டில்பாரை பார்த்துக் கொண்டு கேட்டாள் அஹல்யா.
“உனக்கு அது தான் வசதியா இருக்கும்னா எனக்கு எந்த தடையும் இல்லை அஹல்யா. நாளைக்கு பார்க்குலேயே சந்திப்போம்.”
மனமே இல்லாமல் அவனிடம் விடைப் பெற்று கிளம்பினாள் அஹல்யா.
அவள் சொல்ல போகும் விபரங்களை கேட்டப் பிறகும் இதே போல உறுதியாக இருப்பானா அபினவ்???