”குறை எதுவும் வந்துடக்கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துபார்த்து செய்றாரு”
”அதுக்கு என்ன இப்ப”
”முதலிரவுல உனக்கு ஏதாவது தேவையான்னு கேட்டு போக வந்தேன்”
”என்ன தேவை புரியலையே”
”ப்ச் சந்நியாசி ஆகப் போறவனுக்கு முதலிரவு பத்தி தெரியுமோ தெரியாதோ விளக்கம் சொல்ல வந்தேன்”
”அதெல்லாம் வேணாம் எனக்கும் முதலிரவு பத்தி தெரியும்”
”ஓ அனுபவம் இருக்கா உனக்கு”
”ஏய் அதெல்லாம் இல்லை நீ ஒண்ணு“
”பொய் சொல்லாத முதலிரவு பத்தி தெரியும்ங்கற, சந்தேகமா இருக்கே உண்மையை சொல்லு நீ கன்னி பையன்தானே” என கேட்க அவனுக்கு சங்கடமாகிப் போனது. கணக்குபிள்ளையோ விழுந்து விழுந்து சிரித்தபடி இருக்க கொம்பனுக்கு அவமானமாகிப் போனது.
”சொல்லு கொம்பா நீ கன்னி பையன்தானே” என சத்தமாக கேட்க கொம்பனோ
”கத்தாத என் மானமே போகுது“
”அப்ப சொல்லு ஏன் தயங்கற உனக்கே சந்தேகமா”
”ஒரு சந்தேகம் இல்லை நான் கன்னி பையன்தான் போதுமா”