தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 03 - சசிரேகா
காவேரியின் வீட்டில்
மாலை நேரம் உறக்கம் கலைந்து எழுந்தாள் காவேரி, வழக்கமான அவளது அறையில் இருந்ததால் எப்போதும் போல காபி என சத்தமாக சொல்ல வெளியே காவலுக்கு இருந்த கொம்பனுக்கு கேட்டது.
”மகாராணி எழுந்துட்டாங்க போல இருக்கு, கொழுப்பை பாரு காபியாம் காபி ஏன் அவள் வந்து போட்டு குடிக்க மாட்டாளா என்ன” என கேட்க அவனுக்கு பக்கத்தில் பாவமாக அமர்ந்திருந்த கணக்குபிள்ளையோ
”முதல்ல உன் முறைப்பொண்ணுக்கு சமைக்க தெரியுமா தெரியாதான்னு கேட்டுக்க”
”ஓ இதுவேற ஒண்ணு இருக்கா, இவளைப் பார்த்தா சமைக்க தெரியாதுன்னுதான் தோணுது”
”அப்படின்னா நீ சீக்கிரமா சமையல் கத்துக்க”
”டேய் என்னடா கொழுப்பா”
”இல்லைப்பா வீட்ல ஒருத்தருக்காவது சமையல் தெரிஞ்சாதானே குடும்ப வண்டி ஓடும், எப்படியும் உன் முறைபொண்ணு சமைக்க போறதில்லை, அட உன் பசிக்காவது நீ சமைக்க கத்துக்கிட்டன்னு வையேன் உனக்கே பயன்படும் அதுக்கு சொன்னேன்”
”நான் ஆம்பளைடா, நான் ஏன் சமையல் செய்யனும், அதெல்லாம் பொம்பளைங்க வேலை” என சொல்லும் போதே அவனது தந்தை காபி டம்ளருடன்
”இதோ வந்துட்டேன் மருமகளே“ என சொல்லிக் கொண்டே வந்தவர் அறை வாயிலில் அமர்ந்திருந்த இரு ஜென்மங்களையும் கண்டு அநியாயத்திற்கு கோபித்துக் கொண்டார்
”ஏண்டா இங்க உட்கார்ந்து வெட்டியாதானே பொழுது ஓட்டறீங்க, என் மருமகள் காபின்னு சொன்னது காதுல விழலயா, நான் வேலையை விட்டுட்டு காபி போட்டு கொண்டு