(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

சொத்து இருக்கு, பருத்தி வியாபாரம் செய்றோம், சொந்தமா ஆலை வைச்சிருக்கோம், பருத்தி குடோன் இருக்கு, எங்ககிட்டயே 150 பேர் வேலை செய்றாங்க அதையே நான் பார்த்துக்கலை, நீ சொல்றதையா நான் பார்த்துக்க போறேன். எனக்கு பிடிச்சதை மட்டும்தான் நான் செய்வேன்”

  

”அதெல்லாம் நேத்தோட இப்ப இருந்து நான் சொல்றதைதான் நீ செய்யனும், நான் என்ன உனக்கு கெடுதலா சொன்னேன், நாய்களோட பழகாத கொம்பா ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது, ஏதாவது நாய் ஒண்ணு உன்னை கடிச்சிட்டா அப்புறம் நீ வெறிபிடிச்ச நாயா மாறிட்டா என் வாழ்க்கை கேள்விக்குறியாகாதா”

  

”வாயாடி இது, நல்லதே பேச மாட்டியா நீ, நான் வளர்க்கற நாய்ங்க எப்படி என்னை கடிக்கும்”

  

”அப்படி நினைக்காத கொம்பா காலம் கெட்டுக்கிடக்கு எதுவேணும்னாலும் நடக்கும்”

  

”அது என்னவோ உண்மைதான் காலையில நான் எழும் போதுகூட எனக்கு கல்யாணம் ஆகும்னு நினைக்கலை”

  

”பார்த்தியா பார்த்தியா நீயே சொல்ற, அதே போல என்னிக்காவது உன்னை நாய் கடிச்சிட்டா என்னாகிறது, வேணாமே உன்னோட சொத்தைதான் உங்கப்பா பார்த்துக்கறாரு, எங்களோட தோப்பை நீ பார்த்துக்க அதை பெரிசாக்கு”

  

”முடியாது எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது”

  

”எல்லாம் வரும் முயற்சி செய்“

  

”முடியாது”

  

”முடியாதா”

  

”ஆமாம் முடியாது, நீ என்ன என்னை அதிகாரம் செய்றது, நீ சொன்னா நான் செய்ய

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.