படிக்கும் போது, அந்த வயசு காரணமா, இல்ல, நான் ரொம்ப அழகுன்னு என் ஃபிரென்ட்ஸ் சொன்னது காரணமான்னு தெரியலை, எனக்கு சினிமால நடிக்கனும்னு ஆசை வந்துச்சு. அம்மா, அக்கா இரண்டு பேருக்குமே அது பிடிக்கலை. வேண்டாம்னு சொன்னாங்க. அவங்க வேண்டாம்ன்னு தடுத்ததே எனக்கு சினிமால நடிச்சே ஆகணும்குற ஆசையை அதிக படுத்திச்சு. அம்மா சொன்னதை கேட்டு இருக்கனும்னு அதுக்கு அப்புறம் எவ்வளவோ நாள் யோசிச்சிருக்கேன்.”
அஹல்யா இடைவெளி கொடுப்பதுப் போல பேச்சை நிறுத்தினாள். அபினவ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
“புது நடிகை வேணும்னு அட்வர்டைஸ் செய்திருந்த எல்லா ஸ்டூடியோலேயும் என் போட்டோவைக் கொடுத்தேன். அப்படி போனப்போ எனக்கு அறிமுகமானவன் அர்னவ். எனக்கு ஹெல்ப் செய்றேன்னு சொன்னான். நானும் நம்பினேன். ஸ்டார் ஆக என்னென்ன செய்யனும், போட்டோ ஷூட்ஸ்ன்னு இப்படி நிறைய ஹெல்ப் செய்தான். ஒருத் தடவை அப்படி போனப்போ அவன் ரூம்ல இருந்து ஏதோ எடுக்கனும்னு சொன்னான், நானும் போனேன். அங்கே என் கிட்ட மிஸ் பீகேவ் செய்தான். பளார்னு கன்னத்துல அடிச்சுட்டு வந்துட்டேன். அப்போ என் அக்காக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருந்தது. அர்னவ் நடந்துக் கிட்ட விதத்தைப் பத்தி முதல்ல அக்கா, அம்மா கிட்ட எதையும் சொல்லலை. சொன்னா, இதெல்லாம் வேண்டாம்னு சொன்னோமே கேட்டீயான்னு திட்டுவாங்கன்னு பயம். ஆனாலும் எனக்குள்ளே ஒரு கோபம். அதெப்படி அவன் என் கிட்ட அப்படி நடந்துக்கலாம்னு ஆத்திரம். அக்கா கிட்டேயும், அம்மா கிட்டேயும் உண்மையை சொல்லி, அவனைப் பத்தி கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறேன்னு சொன்னேன். வேண்டாம், இதை இதோட விட்டுருன்னு இரண்டு பேரும் சொன்னாங்க. நான் அப்போவும் அவங்க சொன்னதைக் கேட்கலை. யங் ஆக்டர்ஸ் அசோசியேஷன்ல அர்னவ் பத்தி கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த அசோசியேஷன் தலைவனா இருந்தவன் பேரு கௌரவ். அவனுடைய அம்மாவும் தமிழ்க்காரங்க. நான் சொன்னதைக் கேட்டுட்டு அர்னவை கூப்பிட்டு என் முன்னாடியே கண்டிச்சான். இன்னொரு தடவை அவன் மேல கம்ப்ளெயின்ட் வந்தா போலீஸ்ல மாட்டி விட்ருவேன்னும் சொன்னான். கௌரவ் ஒரு பணக்காரன். அவங்க அப்பா நிறைய ப்ரொட்யூசர்களுக்கு கடன் கொடுத்து படம் எடுக்க உதவி செய்றவர். அவங்க அப்பாக்கு தெரிஞ்ச பரோட்யூசர் வழியா எனக்கும் சான்ஸ் வாங்கி தரேன்னு சொன்னான். எனக்கு அந்த நேரத்துல நடிக்கனும்னு இருந்த ஆர்வமே போயிடுச்சு. அதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். ஒரே ஒரு தடவை ட்ரை செய்துப் பார்