அதிர்ந்தான். அவளை விலக்க முயன்றான், முடியவில்லை மென்மையான அவளின் அணைப்பு அவனை வசீகரித்தது இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் என அவன் உள்மனது கேட்டது. சந்நியாசியாவதில்தான் முழுஇன்பம் உள்ளதென அதுவரை நினைத்தவனுக்கு அவளின் ஒரு அணைப்பில் இன்பம் இதுதான் என உணர்ந்தான். தன்னையும் மீறி அவளை தன் கைகளுக்குள் அரவணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் திடுக்கென கண்விழித்துப் பார்த்தாள் காவேரி, அருகில் அவனின் முகத்தைக்கண்டு திடுக்கிட்டாள் சட்டென அருவாளை அவனது கழுத்தில் வைத்து கீறிவிட அதில் அவன் அலறி எழுந்து அமர்ந்துப் பார்த்தான் சின்ன காயம்தான் 5 துளி இரத்தம் சிந்தியது. அதைவிட அவளின் கோபமான பார்வை அவனை பயமுறுத்தியது, அதுவரை அவளால் அவன் அனுபவித்த இன்பம் வேண்டும் என அவனது மனமும் உடலும் நச்சரிக்கத் தொடங்க அவனோ அவளிடம் பிச்சையெடுப்பது போல பார்த்து வைத்தான். அவளோ
”எவ்ளோ துணிச்சல் உனக்கு என்னை தொட யார் உனக்கு அனுமதி தந்தது, நான் கொடுத்தேனா என்னவோ பெரிசா சொன்ன இதுதானா உன் கட்டுப்பாடு விருப்பமில்லாதவளை தொடறியே நீயெல்லாம் மனுஷனா”
”இல்லை அப்படியில்லை நீதான் என் மேல கையும் காலும் போட்ட”
”போட்டா என்ன தட்டிவிட வேண்டியதுதானே எதுக்கு கட்டிப்பிடிச்ச” என்றாள் கோபமாக
”கத்தாத நீதான் என்னை கட்டிப்பிடிச்ச அந்த நிலையில நான் என்னை மறந்து உன்னை கட்டிப்பிடிச்சேன்”
”அடப்பாவி உன்னை நம்பி எப்படி நான் ஒரே அறையில இருக்கறது இல்லை இல்லை எனக்கு பயமாயிருக்கு நீ என்னை நாசமாக்கிடுவ”
”அய்யோ இல்லை நான் என்ன அன்னியனா உன் புருஷன்தானே”
”அதுவெறும் வாய்வார்த்தைக்குதான் விருப்பமில்லாத கல்யாணம்னு சொன்னியே, இப்ப மட்டும் விருப்பத்தோட வர்ற ஆக உனக்கு வேண்டியது இதுதானா”