தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
29. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் பார்க்கிங்கில் தன் பென்ஸ் காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள் வீணா. அவளை பார்த்து மரியாதையுடன் புன்னகைத்த வரவேற்பாளரை பார்த்து பதிலுக்கு புன்னகைத்து விட்டு உள்ளே சென்றாள். வழியில் வந்த நிலாவிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு, இந்துவின் அறை நோக்கி சென்றாள். அங்கே சாத்தி இருந்த கதவை பேருக்கு லேசாக தட்டி விட்டு கதவை திறந்து உள்ளே சென்றாள். இந்து வீணா வந்ததையே உணராமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துப் போயிருந்தாள். இந்துவின் முன் சென்று மெல்ல கைகளை தட்டி,
"என்ன இந்து, அதுக்குள்ளே இப்படி மாறிட்ட...??? என்ன ட்ரீம்ஸ்ஸா?????????" என்றாள் கேலியாக.
திடீரென அருகில் கேட்ட வீணாவின் குரலில் சற்று தடுமாறி சிந்தனையில் இருந்து விடுபட்ட இந்து, அவளின் பேச்சை கேட்டு விட்டு,
"ப்ச்... அதெல்லாம் இல்லை வீணா... இது வேற விஷயம்...." என்றாள்.
"சும்மா என்கிட்டே பொய் சொல்லாத.... இன்னைக்கு எல்லா மீட்டிங்கையும் கான்செல் பண்ண சொல்லிட்டியாம்... நிலா சொன்னா... ரெண்டு மூணு வாரமாகவே நீ சரி இல்லையாமே...."
"அதெல்லாம் ஒன்னுமில்லை.... "
"சரி அதெல்லாம் அப்புறம் பேசுவோம்... மீட்டிங் எல்லாம் கான்செல் பண்ணி இருக்கியே... ஏதாவது வெளியே போறீயா என்ன?"
"ஆ..... இல்லை... இல்லையே...." என்று உளறினாள் இந்து.
அவளை சற்று வித்தியாசமாக பார்த்துவிட்டு,
"சரி தான்... நிலா சொன்னது சரி தான்.... அது என்ன ஆ இல்லை????" என்றாள் வீணா.
"வீணா... ஏன் என்னை இப்படி இம்சை படுத்துற? நான் இப்போ எங்கேயும் போகலை... ஆமாம்