”முடியாது இது நல்லாயிருக்கு அப்படியே நடந்து போயேன்”
”அய்யோ சொன்னாக் கேளு இப்பவே என்னால தாங்க முடியலை இறங்கு கொஞ்சம்”
”மாட்டேன்“
”இறங்குடி” என கத்தி அவன் தன்னையே குலுக்க அதில் அவள் தடுமாறி இறங்கிய நேரம் படுக்கையில் பொத்தென விழுந்தாள், அதில் அவளது முந்தானை விலக அந்த கோலத்தில் அவளைக்கண்டதும் தாங்க முடியாத உணர்ச்சியில் சட்டென அவளை கட்டியணைத்து படுக்கையில் உருண்டான், அவளோ கத்தினாள், அது எதுவுமே அவன் காதில் விழவில்லை
”விடு விடுடா” என சொல்ல அவனோ மோகத்தில் முனகினான்.
அவனது அணைப்பில் மெல்ல அவளுக்கும் உணர்ச்சி அலைகள் கிளம்ப அவளும் சிணுங்கினாள், அந்த சிணுங்கல் அவனை இன்னும் வெறுப்பேற்றியது, அதே நேரம் சண்முகம் அந்த அறைக்கதவை தட்டவும் இருவரும் பயந்து தள்ளி சென்று நின்றார்கள் அவளோ முந்தானையை சரிசெய்தபடியே கதவை திறந்தாள் சண்முகமோ
”என்னாச்சிம்மா உள்ள ஏதோ அலறல் சத்தம் கேட்டது ஏதாவது பிரச்சனையா”
”ஆமாம்பா உங்க மாப்பிள்ளை என்கிட்ட முறைகேடா நடந்துக்கிட்டாருப்பா” என சொல்ல கொம்பன் அதிர்ந்தான் ஆனாலும் அது உண்மைதானே அதனால் தலைகுனிந்து
”மன்னிச்சிடுங்க மாமா ஏதோ உணர்ச்சி பெருக்கில தப்பா நடந்துக்கிட்டேன் ஆனா பெரிசா எதுவும் நடக்கலை என்னை மன்னிச்சிடுங்க” என சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு செல்ல முயல காவேரியோ தடுத்தாள்
”என்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டியா” என கேட்க அவனோ முதல்முறையாக அவளிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றுவிட சண்முகமோ தன் மகளிடம்