(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”இவள் உண்மையா தூங்கறாளா இல்லை தூங்கற மாதிரி நடிக்கறாளா எப்படி தெரிஞ்சிக்கறது” என மனதில் நினைத்தவன் அவளையே ஏற இறங்கப் பார்த்தான்

  

வெளிர் நீல நிற நைட்டியில் ஒய்யாரமாக படுத்திருந்தாள், அந்த நிறம் அவனுக்கு பிடித்திருந்தது அவளுக்கு எடுப்பாகவும் இருந்தது, மெல்ல படுக்கையில் அமர்ந்து அந்த நைட்டியை தடவிப் பார்த்தான், அதில் அவளுக்கு நடுக்கமும் கூச்சமும் எழுந்தது கண்களை திறவாமலே உடல் நெளிய அவன் புரிந்துக் கொண்டான்

  

”ஓஹோ நடிக்கறியா கேடி இரு உன்னை என்ன செய்றேன் பாரு” என நினைத்தவன் அவளின் நைட்டியை மெதுவாக விலக்க முயல அதில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் காவேரி

  

”ஏய் அறிவில்லை உனக்கு இப்படியா செய்வ லூசு” என திட்ட அவனோ

  

”தூங்கற மாதிரி நடிக்கறியே உனக்கு புத்தியில்லை, உன்கிட்ட பேசலாம்னு வந்தேன் எழுப்பினா எழாம வீம்பா இருந்தா அதான் இப்படி செய்தேன் அதான் எழுந்துட்டியே நான் பேசறதை கேளு”

  

”முடியாது எனக்கு தூக்கம் வருது எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம் போய் படு“

  

”இப்ப நீ நான் சொல்றதை கேட்கலை உன்னை தூங்கவே விடமாட்டேன்”

  

”என்னடா செய்வ”

  

”இந்த நைட்டி எனக்கு பிடிச்சிருக்கு நானே இதை கழட்டி கையோட எடுத்துட்டு போயிடுவேன் பரவாயில்லையா”

  

”அய்யோ”

  

”பயமாயிருக்குல்ல அப்ப நான் சொல்றதை கொஞ்சம் கேளு, இல்லை நான் இப்ப

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.