தெரியுமா, எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி மஹதி, நான் உசுருக்கு உசுரா நினைக்கறவரே என்னை விரட்டறப்ப எதுக்குடா இந்த வாழ்க்கை வாழனும்னு நினைக்கத் தோணுது, பேசாம செத்துடலாம்னு இருக்கு” என சொல்ல மஹதி துடித்துப் போனாள்
”அவசரப்படாத ஜானு, வாழ்க்கையில வர்ற பிரச்சனைகளுக்காக சாக முடிவெடுக்கறது முட்டாள்தனம், நீ படிச்ச பொண்ணு உலகறிவு உனக்கு நிறைய இருக்கு, நீயே இப்படி பேசினா எப்படி”
”என்னால முடியலை மஹதி, எனக்கு எப்படியாவது விடுதலை வேணும் நான் என் மூர்த்தி மாமாகூட சேரனும் அதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லு ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்சிய ஜானகியை பார்த்து மனம் இரங்கினாள் மஹதி
”ஓகே நான் உனக்கு உதவி செய்றேன், இன்னும் 6 மாசம் இருக்குல்ல அப்புறம் என்ன பார்த்துக்கலாம், எனக்கு இப்ப உன் மூர்த்தி மாமாவோட மனநிலைமை தெரிஞ்சிக்கனுமே வெளிய உன்னை விரட்டறாரு, உள்ளுக்குள்ள அவர் உன் மேல பாசமா இருக்காரா இல்லையான்னு தெரிஞ்சிக்கனும், ஏன்னா 6 மாசம் கழிச்சி உனக்கு டைவர்ஸ் ஆனாலும் அவர் உன்னை ஏத்துக்க தயாரா இருக்கனும், அப்படியில்லாம வேங்கையனோட நீ வாழ்ந்ததை மனசுல வைச்சிக்கிட்டு உன்னை விலக்கி வைச்சார்ன்னா ரொம்ப கஷ்டமாயிடும்”
”எனக்கும் இதே கவலைதான் மஹதி“
”ஒரு விசயம் சொல்லு, உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை ஓகே, உனக்கும் உன் ஹஸ்பெண்ட்டுக்கும் நடுவில இருக்கற ரிலேஷன்ஷிப் எப்படி”
”புரியலை”
”புருஷன் பொண்டாட்டிங்கறதால உரிமை எடுத்துக்கிட்டு அவர் உன்கூட வாழ்ந்தாரா”
”ஓ நீ அதை கேட்கறியா, அதுக்கு வாய்ப்பேயில்லை முதலிரவு அன்னிக்கே என் மனசுல இருக்கறதை சொல்லிட்டேன், மீறி என்கிட்ட உரிமை எடுத்துக்க முன்வந்தா தூக்குல