”கண்டிப்பா சொல்ல மாட்டேன், நீ ஆசைப்பட்ட ஒருத்தரை நான் எப்படி கல்யாணம் செய்துக்கறது, அப்புறம் உன்னை நினைச்சிக்கிட்டே அவர் என்கூட சந்தோஷமா வாழ்வாரா என்ன, அப்புறம் என் வாழ்க்கையும் நரகமாயிடுமே”
”அப்படி நடக்ககூடாதுன்னுதான் இந்த வரனை கெடுத்துவிட்டேன், அதுக்கு போய் என் அம்மா என்னை திட்டறாங்க, துரோகின்னு சொல்றாங்க”
”சரி அவங்களை விட்டுத்தள்ளு, இப்ப உன் பிரச்சனைக்கு வரலாம் எப்ப நான் உன் மூர்த்தி மாமாவை சந்திக்கறது”
”பேங்க்லதான் இருப்பாரு அங்க போலாமா”
”பேங்கா ம்ஹூம் பொது இடத்தில எப்படி பர்சனல் விசயமா பேசறது சொல்லு”
”சரி அவர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்”
”குட் இதுவும் நல்ல ஐடியாதான், எப்ப போலாம்”
”நாளைக்கு சன்டே அவருக்கு லீவுதான்”
”ஓகே நாளைக்கே போலாம் ஆமா கேட்கறேன்னு தப்பா நினைக்காத”
“என்ன விசயம் சொல்லு”
”நான் வேங்கையனை பார்க்கனுமே”
”சே அவனை எதுக்கு நீ பார்க்கனும்”
”ப்ச் அப்படியில்லை சும்மா பார்க்கலாம்னுதான்”