”இவள் போடற கணக்கை பார்த்தா என் சொத்துல பாதி கேட்பா போல இருக்கே”
”நான் ஒண்ணும் அவ்ளோ பேராசை பிடிச்சவ இல்லை ஒரு லட்சம் கொடு”
”எது ஒரு லட்சமா என்ன விளையாடறியா”
”இதப்பாரு காதல்ங்கறது சும்மா கிடையாது போற வர்றவங்களுக்கெல்லாம் அதை கத்துக் கொடுக்க முடியாது”
”சே உன்னோட பெரும் தொல்லையா போச்சி” என அலுப்பாக எழுந்துக் கொள்ள
”எங்க போற”
”அம்மா வீட்டுக்கு”
“எதுக்கு”
”நீ பீஸ் கேட்டல்ல அதுக்கு பணத்துக்கு எங்க போறது இரு வாங்கிட்டு வரேன்”
”என்னன்னு சொல்லி வாங்கிட்டு வருவ”
”காதல் பாடம் கத்துக்க பீஸ் கேட்டாள்ன்னு சொல்வேன்”
”அப்படி சொன்னா உங்க வீட்ல பணம் தரமாட்டாங்க, நான் சொல்ற மாதிரி சொல்லு என் பொண்டாட்டிக்கு நகை வாங்கனும்னு சொல்லு உடனே தருவாங்க”
”உனக்கு நகையா பொய்யே ஆனாலும் சரி இதை நான் சொல்ல மாட்டேன், உண்மையை சொல்லி எப்படி ஒரு லட்சத்தோட வரேன்னு மட்டும் பாரு” என கெத்தாக சொல்லிவிட்டு அவன் செல்ல அவனது வீரநடையை பார்த்தபடி வியப்புடன் வந்த கணக்குபிள்ளையோ