(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

காவேரியிடம்

  

”என்னம்மா தங்கச்சி சிங்கம் எங்க வீரநடை போட்டு கிளம்புது”

  

”அவருக்கென்ன வேலை அம்மா வீட்டுக்கு போறாராம்”

  

”இவன் ஒருத்தன் பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு போயிடுவான் சே, ஆமா இந்நேரம் எதுக்கு போறான் உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா”

  

”பிரச்சனையெல்லாம் இல்லைண்ணா, உங்க நண்பர் கொம்பன் இருக்கான்ல அவரு காவேரிங்கற பொண்ணை காதலிக்க நான் அவருக்கு பாடம் எடுக்கனுமாம், அதுக்கு ஒரு லட்சம் ரூபாய் பீஸ் கேட்டேன் அதை கொண்டு வர அம்மா வீட்டுக்குப் போறாப்ல” என சொல்ல முதலில் கணக்குபிள்ளை குழம்பினான் பின் தெளிந்து

  

”அய்யோ கடவுளே கொம்பன் ஏன் இப்படி ஆனான்னு தெரியலையே”

  

”எனக்கும் வேடிக்கையா இருக்கு அண்ணா, என்னை காதலிக்க என்கிட்டயே பாடம் எடுக்க வராராம் கேட்கவே சிரிப்பா இருக்குல்ல அண்ணா”

  

“எனக்கு சிரிப்பு வரலை யோசனையா இருக்கு”

  

“என்ன அண்ணா யோசனை”

  

”காவேரியை காதலிக்கறானாம் ஆனா உன்னை வெறுக்கறானாம் அப்படின்னா அவன் பொண்டாட்டியை பிடிக்கலை அதானே அர்த்தம்”

  

”ஆனா நான்தானே காவேரி”

  

”இல்லைம்மா அவன் மனசுல உன்னை ரெண்டு விதமா நினைச்சி வைச்சிருக்கான் போல இருக்கு”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.