(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”கேளு நான் இப்ப காவேரியை காதலிக்கனும்”

  

”ஐஐஐ”

  

”அய்யே ரொம்ப ஆசைப்படாத நான் சொன்னது காவேரியை உன்னையில்லை“

  

”காவேரியும் நான்தானே”

  

”சீ சீ நீ என் பொண்டாட்டி”

  

”அய்யோ மரகழண்ட கேஸ் எல்லாம் எனக்குதான் வாய்க்கனுமா, இதை கட்டிக்கிட்டு நான் என்னத்த சுகப்படப்போறேனோ தெரியலையே ஆண்டவா” என புலம்பினாள் காவேரி

  

”புலம்பாதடி கேளு”

  

”சொல்லு” என்றாள் சலிப்பாக

  

”எனக்கோ காதலிக்க தெரியலை அதனால ஏற்கனவே காதலிக்கறவங்க கிட்ட எப்படி காதலிக்கறதுன்னு பாடம் கத்துக்கிட்டு வந்து காவேரியை காதலிக்கப் போறேன் எப்படி” என கெத்தாக கேட்க அவளோ அவனை திருஷ்டி கழித்து

  

”நீ வேற லெவல் உன்னை போல யோசிக்க யாராலயும் முடியாது நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை தெரியுமா”

  

”அப்படியா சொல்ற”

  

”பின்ன நீ யாரு வில்லேஜ் விஞ்ஞானியாச்சே எப்படியெல்லாம் உன் மூளை வேலை செய்யுது பாரு”

  

”என்னை புகழ்ந்தது இருக்கட்டும் யாராவது காதலிக்கறவங்க உனக்கு தெரிஞ்சவங்க

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.