கோபப்பட்டுட்டு இருந்தா வாழ்க்கை வீணாயிடும்”
”வேற நான் என்னதான் செய்றது”
“அதான் சொன்னேனே அவளை காதலிக்க ஆரம்பி”
”எப்படிடா எனக்கு காதலிக்க தெரியாதே”
”கத்துக்க”
”எப்படி கத்துக்கறது எனக்கு சொல்லிக்கொடு”
”ஆமாம் நான் அப்படியே 1000 பேரை காதலிச்சிட்டேன் பாரு உனக்கு பாடம் எடுக்க போடா போய் யாராவது காதலிக்கறவங்க கிட்ட கேட்டு கத்துக்க கிளம்பு”
”யாரை போய் தேடறது”
”இதப்பாரு இங்க நின்னு யோசிக்காத அதோ அந்த பக்கமா போய் யோசி என் வேலையை கெடுக்காத போ அப்படி”
“என்னடா விரட்டற”
”பின்ன என்னடா நீ கெட்டதும் இல்லாம என்னையும் சேர்த்து கெடுப்ப போல, நானாவது சிவபக்தனா இருக்கறேன் உன்னை போல சம்சாரியாக மாட்டேன்” என சொல்ல கொம்பன் கலகலவென சிரித்துவிட்டு
”இப்படித்தான் நானும் சொல்லிக்கிட்டு அலைஞ்சேன், கடைசியில என் நிலைமை என்னாச்சிப் பார்த்தியா, நீயும் இப்படியே பினாத்திக்கிட்டு இரு உனக்கும் என் நிலைமைதான்“
”அதுக்கு வாய்ப்பில்லை ராசா கிளம்பு போ” என சொல்ல கொம்பனோ பலத்த