”முழுசா கேளு, தோப்புகரணம் போடறதுக்கு முன்னாடி ஒரு முறை தப்பு செய்தாலும் தப்புதான் 9 முறை தப்பு செய்தாலும் தப்புதான்னு சொல்லி”
”சொல்லி”
”அவளுக்கு 9 முறை முத்தம் கொடுத்துட்டேன்“
”அப்புறம்”
”அப்புறம் என்ன தோப்புக்கரணம் போட ஆரம்பிச்சேன் அவளோ வெட்கப்பட்டு உள்ள ஓடிட்டா நான் இப்படி ஓடிவந்தேன் எப்படி அவளை அடக்கற வழி” என்றான் கெத்தாக
”சே இதெல்லாம் ஒரு வழியாடா, அவளை போலவே நீயும் மாறிட்ட, அவள்தான் உன் பலவீனத்தை தெரிஞ்சிக்கிட்டு அதை வைச்சே வெறுப்பேத்தி உனக்கு நரகத்தை காட்டறாள்னா நீயும் அதையே செய்ற பார்த்தியா, பெண்களை அடக்கற வழியா இது, தப்புடா அன்பால அவங்களை நாம அடக்கனுமே தவிர இப்படியெல்லாம் செய்யக்கூடாது, நீ சரியான ஆம்பளைன்னா அவளை அடக்க பார்க்காத, அன்பை காட்டு காதலிச்சிப்பாரு அப்புறம் தன்னால அவள் மனசு இறங்கி உன்கிட்ட வருவா”
”என்னது காதலா”
”ஆமாம்”
”காதல் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே”
”ஆமா இதெல்லாம் உனக்குத் தெரியாது ஆனா முத்தம் கொடுக்க மட்டும் தெரியும்”
”அது என்னவோ அந்த நிமிஷம் கோபத்தில வந்துடுச்சி கொடுத்தேன்”
“இந்த கோபத்தை குறைச்சிக்க நண்பா உனக்குன்னு குடும்பம் அமைஞ்சிடுச்சி இன்னும் நீ