அதைக்கேட்டு அதிர்ந்தாள் மாதவி
”அய்யோ கண்ணகி” என மனதில் நினைத்தவள்
”எப்படியாவது அவளை காப்பாத்துங்க அவள் பாவம்” என அலற
”எனக்கும் தெரியும் மாதவி, என்னால முடிஞ்ச எல்லா வழியையும் பயன்படுத்திட்டேன் ஆனாலும்”
”இப்படி சொன்னா எப்படி”
”இந்த விசயம் இவ்ளோ தூரம் பெரிசாகும்னு நான் நினைக்கலை இதுக்கு எல்லாம் காரணம் அந்த சிலம்புதான்”
”சிலம்புவா யாரு உங்க நண்பன்தானே”
”ஆமாம் அவன் செஞ்ச தப்பு இது, பழியை தூக்கி கண்ணகி மேல போட்டுட்டான்“
”சரி அவனை கொண்டுபோய் நிறுத்திட்டு கண்ணகியை காப்பாத்துங்க”
”அவன் காணலை தேடிப்பார்த்துட்டேன், எங்க போய் ஒழிஞ்சான்னு தெரியலை” என சொல்ல அவளோ யோசித்தாள்.
”இந்த சிலம்பு கொஞ்ச நாள் முன்னாடி நம்மகிட்ட வந்து வம்படியா பேசி வைச்சானே, வழிஞ்சான், நெளிஞ்சான், போன் நெம்பர் கொடுத்தான் அப்புறம் எங்கயோ தங்கியிருக்கறதா சொன்னானே, நம்மளை டேட்டிங்குக்கு கூப்பிட்டானே ம்ம் அய்யோ சட்டுன்னு எதுவும் நினைவுக்கு வரலையே” என மனதுள் புலம்ப கோவலனோ குழம்பினான்
”மாதவி மாதவி என்னாச்சி லைன்லதான் இருக்கியா”
”ஆமா இருக்கேன், எனக்கு உங்க நண்பனை தெரியும் கொஞ்ச நாள் முன்னாடி என்னை தேடி