”பேசாதடா நீயாடா நண்பன், என் காலேஜ்க்கே உன்னால கெட்ட பெயர் வந்துடுச்சி மரியாதையா என்கூட வா”
”எங்க”
”போலீஸ் ஸ்டேஷனுக்குதான், நீ செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவி உன்னை வைச்சிதான் நான் கண்ணகியை காப்பாத்தப் போறேன்”
”முடியாது நான் வரமாட்டேன்” என தப்பிக்க முயல இதில் கோவலன் அவனை விரட்டி பிடிக்க என ஒரு ஒட்டப்பந்தயமே நடந்தது, முடிவில் கோவலனால் வெகுதூரம் ஓட இயலாமல் மறுபடியும் சிலம்புவை தப்பிக்க விட்டான்.
இருந்த ஒரு வழியும் தவற விட்ட கோபத்தில் தன்னையே திட்டிக் கொண்டான் அந்நேரம் போன் வந்தது மாதவிதான்
”ஹலோ மாதவி“
”என்னாச்சி கோவலன் கண்ணகியை காப்பாத்திட்டீங்களா”
”இல்லை மாதவி நீ சொன்ன முகவரியில அந்த சிலம்புவை பார்த்தேன் அவனை பிடிக்கறப்ப தப்பிச்சி ஓடிட்டான் என்னால அவனை விரட்டி பிடிக்க முடியலை மிஸ் பண்ணிட்டேன்”
”சே இப்படியா பொறுப்பில்லாம இருப்பீங்க, உங்களால பாவம் ஒரு அப்பாவி பொண்ணு மாட்டிக்கிட்டா, உங்களை போய் நான் நம்பினேனே போதும், இனி என்கிட்ட பேசாதீங்க” என சொல்லி போன் கட் செய்தாள். அவ்வளவுதான் கோவலனுக்கு அந்த உலகமே ஸ்தம்பித்துப் போனது. வாடினான். மாதவிக்கு போன் செய்தான், ஆனால் அவளோ கட் செய்துவிட அவனது கண்கள் கலங்கியது.
மறுபக்கம் கோவலனால் கண்ணகியை காப்பாற்ற இயலவில்லை என உதயமூர்த்தி சொன்னதுதான் தாமதம் ஈஸ்வரமூர்த்தியே களத்தில் இறங்கினார், நேராக போலீஸ்