அங்கிருந்து சென்றான்
அவன் சென்றதும் மாதவி நன்றாகவே குழம்பிப்போனாள்
”கோவலனுக்கு எப்ப இருந்து இந்த எண்ணம் வந்தது, இது போல அவர் யோசிக்கற மாதிரி நாம தப்பா நடந்துக்கலையே ப்ச் என்னதான் நடக்குது இங்க” என புலம்ப அந்நேரம் கண்ணகி வந்து இறங்கினாள்
”கண்ணகி வந்துட்டியா என்ன இவ்ளோ லேட்”
”வேலையிருந்தது மாதவி ஏன் உன் முகம் பதட்டமா இருக்கு என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
”அதெல்லாம் இல்லையே ஆமா உன் முகம் ஏன் டல்லா இருக்கு ஏதாவது பிரச்சனையா“
”ஆமாம்“
”என்னது அது”
”காலையில தாளாளரை பார்த்துப் பேசினேன், அவர் சொல்றாரு நான் அவரோட பேரனை கல்யாணம் செய்துக்கனுமாம்” என சொல்ல மாதவி அதிர்ந்தாள்
”என்னடி சொல்ற உண்மையாவா”
”ஆமாம் அவர் அப்படி கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, எனக்கும் அவருக்கும் செட்டாகாதுன்னு சொல்லிட்டேன் ஆனா அவர் ஒத்துக்கலை, ஒருவேளை கோவலனே உன்கிட்ட வந்து என்னை கல்யாணம் செய்துக்கறியான்னு கேட்டா என்ன சொல்வன்னு கேட்டாரு”
”அதுக்கு நீ என்ன சொன்ன”