”என்ன சொல்றது அவரே வந்து கேட்டா சரின்னுதான் சொல்ல முடியும்” என்றாள் வெகுஇயல்பாக
”அப்ப நீ அவரை விரும்பறியா”
”அப்படி சொல்லவும் முடியாது ஆனாலும்” என இழுத்தாள் கண்ணகி
”சரியா சொல்லுடி மனசு படபடன்னு அடிச்சிக்குது”
”தெரியலை மாதவி அவரை எனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியலை ஆனாலும்”
”என்னடி ஆனாலும்னு இழுக்கற, முடிவா சொல்லு அவரை நீ விரும்பறியா”
”விருப்பம்னு இல்லை, அவரை பிடிக்கும் அவ்ளோதான் அதுக்கு மேல ஒண்ணும் இல்லை, அதுக்காக இந்த காதல் கீதல்லாம் இல்லை, பிடிக்கும் அவ்ளோதான்”
”எலியும் பூனையுமால இருப்பீங்க ரெண்டு பேரும்”
“ஆமாம் ஆப்போசிட் அப்ரோச்தானே எப்பவும் ஒண்ணு சேரும்”
”ஓ அப்படி சொல்றியா”
”ஆமா நீ என்ன நினைக்கற கோவலனுக்கு நான் செட்டாவேனா”
”தெரியலை கண்ணகி”
”சரி விடு அவர் என்னிக்கு சொல்றாரோ அன்னிக்குப் பார்த்துக்கலாம்” என இயல்பாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அதன்பின் மாதவியின் மனம் பட்ட பாடு இருக்கே அய்யோ அவள் துடித்துப் போனாள், அந்த