சென்றார்கள்.
வீதி காலியானதும் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான் அகத்தியன், கார் கிளம்பியது அவனது செயலைக் கண்ட அங்கமுத்துவோ எதையும் பேச முடியாமல் வெறுப்பில் பல்லைக்கடிக்க அந்த சத்தம் கேட்ட அகத்தியனோ
”என் மேல கோபமா மாமா”
”ஆமாம்”
”இப்ப நான் என்ன தப்பு செய்தேன்”
”பின்ன கீழவீதி ஆளுங்களை அதட்டி விரட்டின சரி நியாயம், நம்மாளுங்களை ஏன்பா திட்டி விரட்டற, நீ மாறனும் அகத்தியா நம்மாளுங்களுக்கு ஏத்த மாதிரி மாறு, அதான் உனக்கு நல்லது”
”இதப்பாருங்க மாமா எனக்கு எல்லாருமே ஒண்ணுதான், பிரிச்சி பார்க்கறது தப்பு, நீங்க என்னை மாத்த முயற்சி செய்யாதீங்க மாமா நான் சரியாதான் இருக்கேன்” என சொல்லும் போதே கார் கார்மெண்ட்ஸ் கட்டிடம் முன் இருந்த கேட்டின் வழியாக நுழைந்து ஓரிடம் பார்த்து நின்றது.
கார் நின்றதும் அகத்தியன், அங்கமுத்து, டிரைவர் என அனைவரும் இறங்கினார்கள்.
அதில் அகத்தியனோ சுற்றி முற்றிப் பார்த்தான் வேலை பார்க்க ஆட்கள் பரபரவென உள்ளே வந்த வண்ணம் இருந்தார்கள் அதில் இருந்து ஒருவனை பார்த்து
”வீரா” என அகத்தியன் அழைக்க அந்த அழைப்பு கேட்டதும் வீரா பயபக்தியுடன் அகத்தியன் முன் வந்து பவ்யமாக நின்றான்
”சின்னய்யா சொல்லுங்கய்யா” என சொல்ல அகத்தியனோ தனது டிரைவரிடம்