”ஏன் என்னை நீ காதலிக்கலையா”
”காதலிச்சேன் நீங்க கோவலனா இருந்தப்ப”
”இப்பவும் நான் கோவலன்தான்”
”இல்லை நீங்க கண்ணகியோட கணவன்”
”ஓ இதுதான் உன் பிரச்சனையா இதை சரியாக்கலாம், கண்ணகியை நான் விவாகரத்து செய்றேன்” என சொல்ல அதைக்கேட்டு கண்ணகியும் மாதவியும் அதிர்ந்தார்கள் உதயமூர்த்திக்கு கோபம் அதிகரித்து கோவலனின் கன்னத்தில விட்டார் ஒரு அறை அதில் அவன் தடுமாறி நின்றான்
மாதவியோ கண்ணகியிடம் சென்று நின்றாள் கண்ணகியோ மாதவியிடம்
”கோவலன் சொல்றதுதான் சரி”
”இல்லை கண்ணகி இது தப்பு”
”இல்லை இதுதான் சரி கோவலனால என்கூட வாழ முடியாது அதை விட அவர் ஆசைப்பட்ட உன்கூட வாழட்டுமே“
”அப்ப நீ என்ன செய்யப் போற”
”தாத்தா எனக்கு பெரிய கடமையை கொடுத்துட்டுப் போயிருக்காரு, கல்லூரி பொறுப்பு என்னோடது அதை நான் பார்த்துக்கிறேன்”
”உனக்குன்னு வேற வாழ்க்கையை அமைச்சிக்க மாட்டியா”