புகைப்படத்தையோ ஓவியத்தையோ நீங்க பத்திரமா வைச்சிருப்பீங்க, எனக்கு அதை காட்ட முடியுமா“
”அது எதுக்கு உனக்கு”
”இல்லை என் அப்பாவும் அம்மாவும் அவங்களை பத்தி உயர்வா பேசுவாங்க, ஆஹா ஓஹோன்னு புகழ்பாடுவாங்க, அப்பேற்ப்பட்டவங்க எப்படியிருப்பாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு ஆசையா இருக்கு, காட்டுவீங்களா”
”எல்லாம் உன்னை மாதிரிதான் இருப்பா“
”என்னது என்னை மாதிரியா”
”உன் குணத்தை போல இருப்பா அவ்ளோதான்”
”அப்ப அவங்க போட்டோவை காட்ட மாட்டீங்களா”
“என்கிட்ட இல்லை“
”பொய்”
”நான் பொய் சொல்லலை நிஜமாவே என்கிட்ட இல்லை”
”உங்க மனைவி மேல நீங்க எந்தளவுக்கு அன்பு வைச்சிருக்கீங்கன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்”
”என்ன உளர்ற”
”உளரலை உண்மையை சொல்றேன், உங்க மனைவி இறந்த துக்கத்தை மறக்கவும் அவங்களை என்னிக்குமே உங்களுக்குள்ள பத்திரமா வைச்சிக்கவும் நினைச்சிருக்கீங்க, அதுக்கு உதாரணமா இதோ இருக்கே உங்க போட்டோ இதுலயே உங்க மனைவியை ஒளிச்சி