”ஆக என்னைப் பார்க்க வரலை”
”உங்களைதான் தினமும் நிலத்தில பார்க்கிறேனே, அம்மாதான் வீட்டுக்குள்ளயே இருக்கு, ஏதாவது ஒரு சமயத்தில அது வெளிய வரும் பார்க்கலாம்னு இந்த வீட்டை சுத்தியே அலைஞ்சேன், பார்க்க முடியலை”
”இப்ப மட்டும் எப்படி வீட்டுக்குள்ள வந்த“
”என்னை பிடிச்ச எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்திருக்கேன், உங்களுக்கு இந்நேரம் விசயம் வந்திருக்கனுமே, எனக்கு டைவர்ஸ் கிடைச்சிடுச்சிப்பா” என்றான் மகிழ்வுடன் அதைக்கேட்டு அவரும் சிரித்தபடியே
”எல்லாம் தெரியும் டைவர்ஸ் ஆனதுக்கு ரொம்ப சந்தோஷப்படற போல, சரி விடு இப்பவாச்சும் எங்ககிட்ட வரனும்னு தோணிச்சே ஏன் முன்னாடி வர்றதுக்கு என்ன கேடு”
”முன்னாடியே வந்திருப்பேன், அப்ப நான் ரொம்ப குழம்பிப் போயிருந்தேன் என்னால ஒரு சரியான முடிவு எடுக்க முடியலை”
”இப்ப என்னாச்சி“
”ஒரு முடிவோட உங்களை தேடி வந்திருக்கேன்”
”என்னது எங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதா உன் முடிவு”
“இல்லை உங்களை கூட்டிக்கிட்டு சின்ன மருமகள் வீட்டுக்குப் போய் பொண்ணு கேட்டு கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவோட வந்திருக்கேன்” என சொன்னதும் எங்கிருந்தோ பறந்து வந்தார் மங்களம்.
தன் மகனை ஆரதழுவிக் கொண்டவர் அவன் முகத்தையும் உருவத்தையும் கண்டு கவலைக்