”ப்ச் உனக்குதான் இது“
“இத்தனையுமா”
”ஆமாம்”
”நான் ஒண்ணுதானே கேட்டேன்“
”அட வைச்சிக்கயேன் என்ன இப்ப”
”அதுசரி பணத்தை பெருக்க முடியலைன்னாலும் அதை செலவு செய்ய நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்கீங்க”
”என்ன நீ அப்படி பேசினா இப்படி பேசற இப்படி பேசினா அப்படி பேசற, நீ என்ன கேட்ட புடவை கேட்ட, உனக்காக ஒண்ணு வாங்கினா என்ன 10 வாங்கினா என்ன வாங்கித்தந்தது நான்தானே, கட்டிக்கயேன்”
”ஆமா எனக்கே பத்து புடவை எடுத்துக் கொடுத்தீங்கன்னா அப்ப அந்த மாதவிக்கு 100 புடவை எடுத்து தருவீங்கள்ல”
”ஏய் பைத்தியம் நான் ஏன் அவளுக்கு எடுத்து தரேன் நீயா உளறாத”
”ஆமா விருப்பமில்லாத பொண்ணுக்கே 10 புடவைன்னா உங்க உயிர் காதலிக்கு எப்படியும் 100 புடவை தருவீங்க, எனக்குத் தெரியும் இதெல்லாம் உங்க ஆடிட்டிங்ல வராதே”
”ஷ்ஷ்ஷ் அம்மா தாயே, கண்ணகி இதோட நிப்பாட்டிக்க, மாதவி வரும் போது பார்த்துக்கலாம், அவள் வந்தபின்னாடி அவளுக்கு நான் புடவை எடுத்துக் கொடுக்கிறேனோ இல்லையோ இப்ப எதுக்கு அதை பத்தி பேசிக்கிட்டு, இப்போதைக்கு இந்த புடவைகளை வைச்சிக்க என் பிறந்த நாளுக்கு ஒரு புடவையை கட்டிக்க”