ஜானகியிடம்
”ஜானகி இனி இங்க பேசி ஒரு பிரயோசனமும் இல்லை கிளம்பு, நாம நேரா வேங்கையன்கிட்டயே பேசிடலாம் வா” என சொல்ல ஜானகி சரியென தலையாட்டிவிட்டு மஹதியிடம்
”சரி மஹதி நாங்க கிளம்பறோம்” என சொல்ல மஹதியோ
”நீங்க இங்க வர்ற விசயம் அவருக்கு தெரியுமா“
”ம் தெரியுமே”
”தெரிஞ்சுமா அவர் எதுவும் செய்யாம இருக்காரு”
”அதான் எனக்கும் குழப்பமா இருக்கு, நான் போய் நேராவே என்ன ஏதுன்னு பேசி பார்க்கிறேன், நீ சொன்ன மாதிரியே அவரு உன்னை தேடி வந்தா கண்டிப்பா நீ அவரை ஏத்துக்கனும், பேச்சை மாத்தக்கூடாது” என சொல்ல மஹதியோ சோர்ந்துப் போய் தலையை தாழ்த்த ஜானகியோ
”ஏய் உன்கிட்டதான் பேசறேன் பதில் சொல்லு”
”இதப்பாரு என்னால உனக்கு எந்த பதிலும் சொல்ல முடியாது ப்ளீஸ் நீ கிளம்பு போ” என விரட்ட ஜானகியோ மூர்த்தியிடம்
”மாமா வாங்க போலாம் நேரா வேங்கையன்கிட்ட பேசிடலாம் கிளம்புங்க” என சொல்லிவிட்டு கிளம்பி வாசலுக்கு செல்ல அங்கு ஒரு பஸ் வர சரியாக இருந்தது.
பஸ்ஸைக்கண்டு அனைவருமே குழம்பினார்கள், பஸ் விட்டு முதலில் வேங்கையன்தான் இறங்கி நின்றான், அவனைக்கண்டதும் மஹதிக்குள் பரவசம் உண்டானது, வேங்கையனை தொடர்ந்து வரிசையாக வீரசிங்கம், மங்களம், குபேரன், வேணி, செல்வம், பரிமளா என அனைவரும் இறங்கினார்கள், இன்னும் சில ஆட்களும் இறங்கினார்கள், மகேந்திரனுக்கு