மலர்ந்தார், ஆனால் மஹதியோ நொந்துப் போனாள்
”அப்பா அவரு வேணாம்பா நான் லண்டனுக்கே போறேன்”
”என்னம்மா இப்படி பேசற, வேங்கையன் சொன்னது கேட்டிச்சில்ல, அந்த ஜானகியும் மூர்த்தியும் சேர்ந்துட்டாங்க, அவங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது பார்த்தல்ல உன்னை பொண்ணு கேட்க அவங்களும் வந்திருந்தாங்க”
”வேணாம்பா முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் நானே என் மனசை கட்டுப்படுத்தி வைச்சிருக்கேன், மறுபடியும் என் மனசை கஷ்டப்படுத்தாதீங்க நடக்கறது நடக்கட்டும்“
”விளையாடாத மஹதி“
”நான் ஒண்ணும் விளையாடலை, உண்மையிலயே வேங்கையனுக்கு நான் வேணும்னா அவர் ஏன் இங்கிருந்து போகனும்” என கேட்க அதற்கு மகேந்திரனிடம் பதில் இல்லை சாந்தியோ
”எப்படி அவங்க இங்க இருக்கறது தர்மசங்கடமா நினைச்சிருப்பாங்க ஒண்ணும் பிரச்சனையில்லை அவங்களை கூப்பிட்டு உட்கார வைச்சி பேசலாம்“
”அம்மா அப்ப இப்ப வந்த மாப்பிள்ளையை என்ன செய்வீங்க”
”ஏன்மா நாங்க என்ன அவன்தான் மாப்பிள்ளைன்னு முடிவா பண்ணிட்டோம், உன் சம்மதம் வேணும்னு அவன் சொல்லிட்டுப் போனான், அவ்ளோதானே நாளைக்கே போன் பண்ணி மன்னிச்சிடுங்க எங்களுக்கு உங்க சம்பந்தம் வேணாம்னு சொல்லிட்டா போச்சி”
”என்னம்மா இப்படி பேசற“
”இதுல தப்பில்லைம்மா பொண்ணு பார்க்க வந்துட்டாங்கறதுக்காக அவனையே கல்யாணம் செய்துக்கனும்னு அவசியம் இல்லை மஹதி, எனக்கு கூடதான் நாலஞ்சு பேரு பொண்ணு பார்க்க வந்தாங்க, நான் என்ன அவங்களையா கல்யாணம் செய்துக்கிட்டேன், உன் அப்பனைதானே காதலிச்சி கரம்பிடிச்சேன், என்னை போல நீயும் உன் காதலை இழந்துடாத,