“மார்ச்சுவரியில இருக்கற உடம்பு சிலம்புவோடது இல்லைன்னு நிரூபிக்கனும் அதுக்கு ஆதாரம் தேடுங்க அதை வைச்சி நான் வெளிய வந்துடுவேன்“
“அப்போ உண்மையிலயே சிலம்பு உயிரோடதான் இருக்கான்னு சொல்ல வர்றீங்களா”
”தெரியலை என்னால எதையும் கரெக்டா சொல்ல முடியலை”
”வெளிய விசாரிச்சேன், கொலை ஊர்ஜீதம் ஆனா ஆயுள் தண்டனை தருவாங்கன்னு அப்படி மட்டும் ஒண்ணு நடந்தா என் மானம் போனாலும் பரவாயில்லைன்னு நான்தான் என் மானத்தை காப்பாத்த சிலம்புவை கொன்னதா சொல்லி உங்களை காப்பாத்திட்டு தண்டனையை ஏத்துக்குவேன் கோவலன்” என சொல்ல அதைக்கேட்டு மென்மையாக சிரித்த கோவலன்
”வேணாம் மாதவி அந்தளவுக்கு போகாத கண்டிப்பா நான் நிரபராதின்னு தீர்ப்பு வரும், அவசரப்பட்டு எதையும் செய்து வைக்காத, கண்ணகி கூட துணையா இரு, ஆதாரங்களை தேடு ப்ளீஸ்” என கெஞ்ச அவளும் சரியென தலையாட்டிவிட்டு
”கண்ணகிகிட்ட பேசறீங்களா”
”வேணாம்”
”ஏன் அவளை அவாய்டு பண்றீங்க”
”இல்லை நான் படற கஷ்டத்தைப் பார்த்து அவள் வருத்தப்பட்டா என்னால தாங்க முடியாது அதனாலதான்”
”உங்க மனசுல யார் இருக்கா கோவலன்”
”இந்த கேள்வி இப்ப தேவையா”