சாட்சி சொல்லு நான் தடுக்கலை” என சொல்ல மாதவி சரியென தலையாட்டினாள்.
இரு பெண்களும் இணைந்து ஜெயிலில் இருந்த கோவலனை சந்தித்தார்கள். அவனோ கண்ணகியைக்கண்டும் வேண்டுமென்றே மாதவியிடம்
”எனக்காக என்னை தேடி நீ இங்க வருவேன்னு நான் எதிர்பார்க்கலை, உனக்கு என் மேல எவ்ளோ அன்பு, நான் பாக்கியசாலி மாதவி, இந்த அன்பு ஒண்ணு போதும் காலம் முழுக்க நான் ஜெயில் தண்டனை அனுபவிப்பேன்” என சொல்ல கண்ணகியோ
”நானும் இங்கதான் இருக்கேன்” என கத்தினாள் அவனோ அவளை அலட்சியமாக பார்த்துவிட்டு
”இருந்துட்டுப் போ எனக்கென்ன எனக்கு தேவை மாதவிதான்” என சொல்ல அவளோ
”அப்போ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா”
”இதை வேற நான் சொல்லனுமா”
”அப்ப நான் போறேன்”
“அதோ அந்த வழியாதானே வந்த அதே வழியா வெளிய போ, நான் மாதவியோட பேசனும்” என சொல்ல கடுப்பான கண்ணகி அவசரமாக வெளியேறி சென்றுவிட மாதவியோ கோவலனிடம்
”ஏன் இப்படி நடந்துக்கறீங்க பாவம் கண்ணகி”
“உன்கிட்ட நான் தனியா பேசனும் மாதவி அதான் அவளை அனுப்பிவிட்டேன்”
”அதுக்குன்னு இப்படியா”
”ஆமா அவளை போன்னு சொன்னா போக மாட்டா அதான் வெறுப்பேத்தி விரட்டிட்டேன்”