“விடுங்க சத்யாக்கா. பசங்க என்ஜாய் செய்யட்டும்,” என்றாள் அஹல்யா.
“நல்ல டீச்சர் நீ! இதுல மேத்ஸ் டீச்சர் வேற! நான் ஸ்கூல் படிச்சப்போ மேத்ஸ் டீச்சர்னா ஸ்கூலே பயப்படும்!”
“நீங்க கூட பயந்தீங்களாம்மா??? ஊரே பயப்படுற அப்பா பார்த்துக் கூட உங்களுக்கு பயமே இல்லையே???” ஷாலினி கிடைத்த சான்ஸை தவற விடாமல் அம்மாவை கேலி செய்தாள்.
சக்தி மொபைல் ஃபோனை கீழே வைத்து விட்டு சத்தமாக சிரித்தாள். சத்யா இப்போது சக்தி பக்கம் கோபப் பார்வையை வீசினாள்.
“நீ தான் சக்தி ஷாலினியை ஸ்பாயில் செய்துட்டு இருக்க!” சத்யா தோழியிடம் புகார் செய்தாள். ஷாலினி சக்தியிடம் போய் அவள் கழுத்தை சுற்றி கையை போட்டுக் கொண்டாள்.
“என்னை ஏதாவது சொல்லுங்க பரவாயில்லை. என் ஃபிரென்ட் சக்தியை எதுவும் சொல்லாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும்!” ஷாலினி சத்யா போல பேசிக் காட்டினாள். தொடர்ந்து,
“எங்கம்மா இப்படி தான் எங்க அப்பா கிட்ட எப்போவும் சொல்வாங்க சக்தி ஆன்ட்டி,” என்றும் சொன்னாள்!
“அது என்ன உங்கம்மா என் கிட்ட சொல்றது?” தென்றல்வாணன் குரல் கேட்டதோ இல்லையோ, அலறிக் கொண்டு இருந்த பாடல் வால்யூம் தானாக குறைந்தது!
“அருண், நீ இன்னும் ஹோம் வொர்க் முடிக்கலை. வா அதை ஆரம்பிப்போம்!” அஹல்யா அருண் கையை பிடித்துக் கொண்டாள்.
“அப்புறமா வரேன் சத்யாக்கா. வரேன் சார்!” சத்யா, தென்றல்வாணன் இரண்டுப் பேரிடமும் விடைப் பெற்று கிளம்பினாள் அஹல்யா. போகும் போது சக்தியிடமும் கை அசைத்து பை