சொல்லி விட்டுப் போனாள்.
நடப்பதை சின்ன புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சக்தி, அவள் பக்கத்தில் சில வினாடிகளுக்கு முன் நின்றிருந்த ஷாலினியை தேடினாள்! அவளை அங்கே எங்கும் காணவில்லை! அப்பா வந்ததும் அவளும் அங்கே இருந்து எஸ்கேப் ஆகி விட்டது சக்திக்கு புரிந்தது.
“என்ன தேன், இப்படி வீட்டுல எல்லாத்தையும் அன்டர் கன்ட்ரோல்ல வச்சிருக்கீங்க? நீங்க வந்ததும் பின் ட்ராப் சைலன்ஸ் வந்திருச்சு!” சக்தி சொல்லி விட்டு, சிரித்தாள்.
“எங்கே சக்தி, வீட்டுல தான் இதெல்லாம்!” தென்றல்வாணன் அலுப்புடன் சொன்னான்.
“என்னங்க? இப்படி அலுத்துக்குறீங்க??? உங்க சீனியர் ஆஃபிசர் கூட மீட்டிங் ஏதாவது இருந்துதா?” சத்யா அக்கறையுடன் கணவனிடம் விசாரித்தாள்.
“இல்லை சத்யா. ஒரு புது கேஸு. என் மண்டைக் காயுது,” என்றான் தென்றல்வாணன் கடுப்புடன்!
“அப்படி என்னங்க கேஸ்?”
“மலையோரமா விறகு எடுக்க போன இரண்டு பொண்ணுங்களை எதுவோ ஒன்னு துரத்தி இருக்கு!”
“விலங்கு ஏதாவது வந்திருக்கும். இதுல பெருசா என்ன இருக்கு? என்ன விலங்குன்னு விசாரிச்சீங்களா???”
“அங்கே தான் சத்யா பிரச்சனை. இந்த பொண்ணுங்க சொல்றது தரையில வரலையாம். வானத்துல பறந்து வந்துச்சாம். செல் ஃபோன்ல மெசேஜ் வந்தா எரியுற லைட் மாதிரி அதுல லைட் மின்னி, மின்னி எரிஞ்சிச்சாம். திடீர்னு அதுல இருந்து தீயா வேற வந்துச்சாம்!”
“இதென்ன குழந்தைங்க சினிமால வர மாதிரி இருக்கு?”