🌼🌸❀✿🌷
“இப்போ எப்படி இருக்கு வினாயக்? வித்தியாசமா ஏதாவது ஃபீல் செய்ரீயா? டாக்டர் கிட்ட போகலாமா?” ப்ரியம்வதா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
வினாயக் அவனுடைய சைபோர்கை மும்முரமாக அசெம்பிள் செய்துக் கொண்டிருந்தான்.
ப்ரியம்வதா அவனையே மலர்ந்த கண்களால் ரசித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளும் அவளின் மனதில் இருக்கும் காதலை வினாயக்கிற்கு புரிய வைக்க பல ரகமான முயற்சிகளை மேற்கொண்டு விட்டாள்! எல்லாவற்றிலும் அறிவுமேதையாக இருக்கும் வினாயக், காதல் விஷயத்தில் மட்டும் மக்காக இருந்தான். அவளாகவே வாயை திறந்து அவனிடம் அவள் காதலை சொல்லவும் ப்ரியம்வதாவிற்கு தயக்கமாக இருந்தது.
“வினாயக் உன் கிட்ட தான் பேசுறேன்!” ப்ரியம்வதா மீண்டும் வினாயக்கிடம் சொன்னாள்!
“பேசுறீயா??? நான் என்னமோ கீறல் விழுந்த பழைய கால ரெகார்ட்ன்னு நினைச்சேன். எப்படி இருக்க? வித்தியாசமா ஏதாவது இருக்கா’ன்னு இது வரைக்கும் எத்தனை தடவை கேட்டுட்ட? ஒரு பத்தாயிரம் தடவை??? போர் அடிக்குது ப்ரியம்வதா!”
இத்தனை தடவை ஏன் கேட்கிறேன்? உன் மேல் இருக்கும் அன்பினால் தான்டா. மரமண்டை! மனசுக்குள் வினாயக்கை அர்ச்சனை செய்தாள் ப்ரியம்வதா.
“என்ன அமைதியாயிட்ட? கோபமா ப்ரியம்வதா? உனக்கு என்மேல இருக்கும் அக்கறை புரியுது. டோன்ட் வொர்ரி. நான் என்னைப் பார்த்துப்பேன்,” என்றான் வினாயக் கனிவானக் குரலில்!
“நீயே பார்த்துப்பேனா, அந்த இரண்டு நாள் எங்கே போயிருந்தேன்னு சொல்லு!”
“உண்மையாவே தெரியலை ப்ரியம்வதா. அதை விட்டுட்டு வேற ஏதாவது பேசு, ப்ளீஸ்!”
“வேற என்ன பேசுறது?”